பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மேற்கு வங்கத்தின் அனந்தபூரில் நிகழ்ந்த தீ விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை அறிவிப்பு

प्रविष्टि तिथि: 30 JAN 2026 6:43PM by PIB Chennai

மேற்கு வங்க மாநிலம் அனந்தபூரில் ஏற்பட்ட தீ விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 மும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

"மேற்கு வங்க மாநிலம் அனந்தபூரில் அண்மையில் நேரிட்ட கோரமான  தீ விபத்து சம்பவம் மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகையாக தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000 வழங்கப்படும்: பிரதமர் @narendramodi"

(Release ID: 2220969)

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2221051) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Telugu , Malayalam