பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரிபுரா மாநிலம் நிறுவப்பட்ட தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 21 JAN 2026 9:26AM by PIB Chennai

திரிபுரா மாநிலம் நிறுவப்பட்ட தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

திரிபுராவின் பயணம் பாரம்பரியம், நவீனத்துவம் ஆகியவற்றால் இணைந்து அடையாளப்படுத்தப்படுவதாக கூறியுள்ளார். இம்மாநிலம் பல்வேறு துறைகளில் முன்னேற்றங்களைக் கண்டுள்ளது என்றும் அம்மாநில மக்கள் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு உத்வேகம் அளித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் திரிபுரா மாநிலம் மகத்துவமிக்க முறையில் வளமை பெறவும் பிரதமர் பிரார்த்தித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;

“திரிபுரா மாநிலம் நிறுவப்பட்ட தினத்தில் அம்மாநில மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். திரிபுராவின் பயணம் பாரம்பரியம், நவீனத்துவம் ஆகியவற்றால் இணைந்து அடையாளப்படுத்தப்படுகிறது. இம்மாநிலம் பல்வேறு துறைகளில் முன்னேற்றங்களைக் கண்டுள்ளது என்றும் அம்மாநில மக்கள் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு உத்வேகம் அளித்துள்ளனர். எதிர்வரும் காலங்களில் திரிபுரா மாநிலம் மகத்துவமிக்க முறையில் வளமை பெறவும் நான் பிரார்த்திக்கிறேன்”.

**

(Release ID: 2216659)

AD/IR/KPG/PD


(रिलीज़ आईडी: 2216769) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Bengali-TR , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam