குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

புத்தாண்டையொட்டி குடியரசுத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 31 DEC 2025 4:50PM by PIB Chennai

புத்தாண்டு 2026-ஐ யொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத்தலைவர் திருமதி திரெளபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சியான இந்த புத்தாண்டு தருணத்தில் உள்நாட்டிலும்வெளிநாடுகளிலும் உள்ள இந்தியர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவிப்பதாக குடியரசுத்தலைவர் ஒரு செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புத்தாண்டு புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் மற்றும் ஆக்கப்பூர்வமான மாற்றத்தின் அடையாளமாக திகழ்கிறது. தன்னை அறிதலுக்கும்புதிய தீர்மானங்களுக்கும் ஒரு வாய்ப்பாக இது உள்ளது. இந்த தருணத்தில் நாட்டின் வளர்ச்சிசமூக நல்லிணக்கம்சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான நமது உறுதிப்பாட்டை மேலும் நாம் வலுப்படுத்துவோம்.

வலுவான மற்றும் அதிக வளமான இந்தியாவை கட்டமைக்க 2026-ம் ஆண்டு நமது வாழ்க்கையில் அமைதிமகிழ்ச்சிவளத்தைக் கொண்டு வந்து புதிய ஆற்றலை அளிக்கட்டும்” என்று திருமதி திரௌபதி முர்மு கூறியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2210180&reg=3&lang=1   

***

TV/SMB/RK/SE


(रिलीज़ आईडी: 2210260) आगंतुक पटल : 122
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Telugu , Kannada , Malayalam