பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கோவாவின் அர்போராவில் தீ விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 07 DEC 2025 7:08AM by PIB Chennai

கோவாவின் அர்போராவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என திரு நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

நிலைமை குறித்து கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்திடம் பேசியதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"கோவாவின் அர்போராவில் ஏற்பட்ட தீ விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். நிலைமை குறித்து கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த்திடம் பேசினேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது.

உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"கோவாவின் அர்போராவில் நிகழ்ந்த விபத்தில் இறந்த ஒவ்வொருவரின் நெருங்கிய உறவினர்களுக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி"

***

(Release ID: 2199936)

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2200021) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Gujarati , Odia , Telugu , Malayalam