மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
சிறு அளவிலான மீன் பிடித்தல் , மீன்வள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மீன் விவசாயிகள் உற்பத்தி அமைப்புகளை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
Posted On:
08 NOV 2025 10:19AM by PIB Chennai
வளமான மற்றும் உள்ளடக்கிய நீலப் பொருளாதாரம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக , மத்திய அரசு 04.11.2025 அன்று "சிறப்பு பொருளாதார மண்டலத்தில் மீன்வளத்தை நிலையான முறையில் பயன்படுத்துவதற்கான" விதிகளை அறிவித்துள்ளது. இந்தியாவின் கடல்சார் துறையின் பயன்படுத்தப்படாத திறனைத் திறப்பதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டால் ஈர்க்கப்பட்ட இந்த முயற்சி, அந்தமான் & நிக்கோபார் மற்றும் லட்சத் தீவுகளில் சிறப்பு கவனம் செலுத்தி, இந்திய ஆழ்கடல்களில் இருந்து நிலையான மீன்வளத்திற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க 2025–26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட கப்பல்களை நிர்வகிப்பதற்கும் மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மீன் விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு விதிகள் முன்னுரிமை அளிக்கின்றன.இந்த விதிகள் ஆழ்கடல் மீன்பிடித்தலை எளிதாக்குவது மட்டுமல்லாமல், மதிப்பு கூட்டல், கண்டறியும் தன்மை மற்றும் சான்றிதழை வலியுறுத்துவதன் மூலம் கடல் உணவு ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும். இந்த முயற்சி, நவீன உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலமும், இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் பயனுள்ள கண்காணிப்பு பொறிமுறையின் கீழ் நடுக்கடலில் கப்பல் போக்குவரத்துக்கு அனுமதிப்பதன் மூலமும் இந்திய கடல் மீன்பிடித் துறைக்கு புதிய எல்லைகளைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடல் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கவும், சமமான மீன்பிடி வாய்ப்புகளை உறுதி செய்யவும், எல்இடி விளக்கு மீன்பிடித்தல், ஜோடி இழுவை மீன்பிடித்தல் மற்றும் காளை இழுவை மீன்பிடித்தல் போன்ற தீங்கு விளைவிக்கும் மீன்பிடி நடைமுறைகளுக்கு எதிராக சிறப்பு பொருளாதார மண்டல விதிகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கின்றன. பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்க, மீன் இனங்களுக்கான குறைந்தபட்ச சட்ட அளவும் பரிந்துரைக்கப்படும், மேலும் குறைந்து வரும் மீன் வளங்களை மீட்டெடுக்க மாநில அரசுகள் உள்ளிட்ட பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து மீன்வள மேலாண்மைத் திட்டங்கள் உருவாக்கப்படும். சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டை சமரசம் செய்யாமல் உற்பத்தியை அதிகரிக்கும் அதே வேளையில், அருகிலுள்ள கரையோரப் பகுதிகளில் மீன்பிடி அழுத்தத்தைக் குறைப்பதற்காக கடல் கூண்டு மற்றும் கடற்பாசி வளர்ப்பு போன்ற கடல் மீன் வளர்ப்பு நடைமுறைகளும் மாற்று வாழ்வாதாரங்களாக ஊக்குவிக்கப்படும். இந்த நடவடிக்கைகள் குறிப்பாக சிறிய அளவிலான மீனவர்கள் மற்றும் அவர்களின் கூட்டுறவுகளுக்கு பயனளிக்கும், இதனால் அவர்கள் ஆழ்கடல் வளங்களை அணுகவும், அதிக வருமானம் ஈட்டவும், சூரை மீன் போன்ற உயர் மதிப்புள்ள உயிரினங்களை உலக சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முடியும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2187691
***
AD/PKV/RJ
(Release ID: 2187850)
Visitor Counter : 7