பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மத்திய ஆயுதக் காவல் படைகள் மற்றும் மாநில காவல் படைகளின் திறமைகளையும், துணிச்சலையும் வெளிப்படுத்தும் பிரமாண்டமான ஒற்றுமை அணிவகுப்பைப் பிரதமர் பாராட்டினார்

இடுகை இடப்பட்ட நாள்: 31 OCT 2025 7:32PM by PIB Chennai

மத்திய ஆயுதக் காவல் படைகள் மற்றும் மாநில காவல் படைகள் தங்கள் திறமைகளையும், துணிச்சலையும் வெளிப்படுத்துவதற்கு, ஒற்றுமை அணிவகுப்பு ஒரு சிறந்த தருணமாக அமைந்தது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். தற்காப்புக் கலைகள் மற்றும் ஆயுதம் ஏந்தாத போர் பயிற்சிகளில் பெண் வீராங்கனைகளின் அற்புதமான செயல்திறனைக் குறிப்பிட்டு, மகளிர் சக்தியின் குறிப்பிடத்தக்க பங்கேற்பையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில், பிரதமர் தெரிவித்துள்ளதாவது:

"மத்திய ஆயுதக் காவல் படைகள் மற்றும் மாநில காவல் படைகள் தங்கள் திறமைகளையும், துணிச்சலையும் வெளிப்படுத்துவதற்கு, ஒற்றுமை அணிவகுப்பு ஒரு சிறந்த தருணமாக அமைந்தது. நமது மகளிர் சக்தியின் துடிப்பான பங்கேற்பும், சம அளவிலான முக்கியத்துவம் பெறுகிறது. பெண் வீராங்கனைகள் தற்காப்புக் கலைகள் மற்றும் ஆயுதம் ஏந்தாத போர் பயிற்சிகளை திறம்பட வெளிப்படுத்தினர்."

(Release ID: 2184830)

AD/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2184994) வருகையாளர் எண்ணிக்கை : 18