பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தீபாவளி வாழ்த்துகளுக்காக அமெரிக்க அதிபர் திரு டொனால்டு ட்ரம்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர், பகிரப்பட்ட ஜனநாயக சிந்தனைகள் மற்றும் உலகளாவிய அமைதிக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்

Posted On: 22 OCT 2025 8:25AM by PIB Chennai

விளக்குகளின் திருவிழாவைக் குறிக்கும் தருணத்தில் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து அன்பான தீபாவளி  வாழ்த்து தெரிவித்ததற்காக அமெரிக்க அதிபர் திரு டொனால்டு ட்ரம்புக்கு தமது மனமார்ந்த பாராட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா – அமெரிக்கா இடையே நீடிக்கும் கூட்டாண்மையின் பலத்தை எடுத்துரைத்த பிரதமர், பயங்கரவாத எதிர்ப்பிலும் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதிலும், இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட செய்தியில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:

“உங்களின் தொலைபேசி அழைப்புக்கும் அன்பான தீபாவளி வாழ்த்துகளுக்கும் நன்றி அதிபர் ட்ரம்ப். விளக்குகளின் திருவிழாவில், நமது இரண்டு பெரிய ஜனநாயகங்கள் நம்பிக்கையுடன் உலகை ஒளிரச் செய்வதை தொடர்வோம்.   அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஒன்றுபட்டு நிற்போம்.

@realDonaldTrump

@POTUS”

***

(Release ID: 2181390 )

SS/SMB/KPG/RJ


(Release ID: 2181475) Visitor Counter : 16