பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள திரு செர்ஜியோ கோர் பிரதமரைச் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 11 OCT 2025 10:11PM by PIB Chennai

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ள திரு செர்ஜியோ கோர், பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் சந்தித்தார்.

திரு கோரின் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய பிரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், அவரது பதவிக்காலம் இந்தியா-அமெரிக்கா இடையே விரிவான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள திரு செர்ஜியோ கோரை வரவேற்பதில் மகிழ்ச்சி. அவரது பதவிக்காலம் இந்தியா-அமெரிக்கா இடையே விரிவான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். @SergioGor”

***

(Release ID: 2177946)

AD/PLM/SG


(வெளியீட்டு அடையாள எண்: 2178189) வருகையாளர் எண்ணிக்கை : 39