பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

விஜய் குமார் மல்ஹோத்ரா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 30 SEP 2025 8:44AM by PIB Chennai

விஜய் குமார் மல்ஹோத்ரா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

சிறந்த தலைவராகவும், மக்கள் பிரச்சனைகளை நன்கு அறிந்தவராகவும் விஜய் குமார் மல்ஹோத்ரா திகழ்ந்தார் என்றும், தமது நாடாளுமன்ற நடவடிக்கைகள் மூலமும் அவர் அன்புடன் நினைவுகூரப்படுகிறார் என்றும் திரு மோடி கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

சிறந்த தலைவராகவும், மக்கள் பிரச்சனைகளை நன்கு அறிந்தவராகவும் விஜய் குமார் மல்ஹோத்ரா திகழ்ந்தார். தில்லியில் எங்கள் கட்சியை வலுப்படுத்துவதில் அவர் சிறந்த பங்காற்றினார். தமது நாடாளுமன்ற நடவடிக்கைகள் மூலமும் அவர் நினைவு கூரப்படுகிறார். அவரது மறைவு கவலை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், நலன் விரும்புவோருக்கும் இரங்கல் தெரிவிக்கிறேன். ஓம் சாந்தி.”

***

(Release ID: 2172931)

SS/IR/AG/RJ


(रिलीज़ आईडी: 2173024) आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali-TR , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam