உள்துறை அமைச்சகம்
லடாக் விவகாரங்கள் குறித்து லே உயர்நிலை அமைப்பு மற்றும் கார்கில் ஜனநாயகக் கூட்டணி ஆகியவற்றுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த அரசு எப்போதும் தயாராகவே இருந்துள்ளது
Posted On:
29 SEP 2025 8:02PM by PIB Chennai
லடாக் விவகாரங்கள் குறித்து லே உயர்நிலை அமைப்பு (ஏபிஎல்) மற்றும் கார்கில் ஜனநாயகக் கூட்டணி (கேடிஏ) உடனான உரையாடல்களுக்கு அரசு எப்போதும் தயாராகவே இருந்துள்ளது. லடாக் அல்லது அது போன்ற எந்தவொரு தளத்திலும் உயர் அதிகாரம் கொண்ட குழு (ஹெச்பிசி) மூலம் ஏபிஎல் மற்றும் கேடிஏ உடனான கலந்துரையாடலை நாங்கள் தொடர்ந்து வரவேற்கிறோம்.
லடாக்கில் ஹெச்பிசி மூலம் ஏபிஎல் மற்றும் கேடிஏ உடன் நடந்த உரையாடல் வழிமுறை இன்றுவரை நல்ல பலன்களை அளித்துள்ளது. இதில், லடாக்கின் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டை அதிகரித்தல், லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில்களில் (எல்ஏஹெச்டிசி) பெண்கள் இடஒதுக்கீடு மற்றும் உள்ளூர் மொழிகளுக்கு பாதுகாப்பு வழங்குதல் ஆகியவை அடங்கும். அரசில் 1800 பதவிகளுக்கான பணியமர்த்தல் செயல்முறை ஏற்கனவே லடாக் யூனியன் பிரதேசத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான பேச்சுவார்த்தை எதிர்காலத்தில் விரும்பிய முடிவுகளைத் தரும் என்று நாங்கள் நம்புகிறோம்.
(Release ID: 2172865)
***
SS/BR/SH
(Release ID: 2172914)
Visitor Counter : 24
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam