பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

2025 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 48 கிலோ பிரிவில் தங்கம் வென்ற மினாக்ஷிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Posted On: 14 SEP 2025 7:39PM by PIB Chennai

லிவர்பூலில் நடைபெற்ற 2025 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ பிரிவில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மினாக்ஷியின் அசாதாரண வெற்றிக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

 

லிவர்பூலில் நடந்த 2025 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மினாக்ஷியின் சிறந்த செயல்திறனை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்! 48 கிலோ பிரிவில் அவர் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். அவரது வெற்றியும் உறுதியும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.

***

(Release ID: 2166581)

SS/BR/KR


(Release ID: 2166682)