உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தி தினத்தையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷாவின் வாழ்த்துச் செய்தி

இந்தி மற்றும் பிற இந்திய மொழிகள், தொழில்நுட்பம், அறிவியல், நீதி, கல்வி மற்றும் நிர்வாகத்தின் அச்சாணியாக மாற வேண்டும் : திரு அமித் ஷா

Posted On: 14 SEP 2025 9:50AM by PIB Chennai

இந்தி தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

அன்பான நாட்டு மக்களே,

இந்தி தினத்தில் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

நமது இந்தியா அடிப்படையில் மொழி சார்ந்த நாடு. நமது மொழிகள் கலாச்சாரம், வரலாறு, மரபுகள், அறிவு, அறிவியல், தத்துவம், ஆன்மீகம் ஆகியவற்றை தலைமுறை தலைமுறையாக முன்னெடுத்துச் செல்வதற்கான சக்திவாய்ந்த ஊடகமாக இருந்து வருகின்றன. இமயமலையின் உயரத்திலிருந்து தெற்கின் பரந்த கடற்கரைகள் வரை, பாலைவனத்திலிருந்து கடுமையான காடுகள் வரை, மொழிகள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் மனிதன் ஒழுங்குடன் விளங்கவும், தொடர்பு மற்றும் வெளிப்பாடு மூலம் ஒற்றுமையாக முன்னேறவும் வழி காட்டியுள்ளன.

"ஒன்றாக நடப்போம், ஒன்றாகச் சிந்திப்போம், ஒன்றாகப் பேசுவோம்" என்பது நமது மொழியியல்-கலாச்சார உணர்வின் மைய மந்திரமாக இருந்து வருகிறது.

இந்திய மொழிகளின் மிகப்பெரிய பலம் என்னவென்றால், அவை ஒவ்வொரு வகுப்பினருக்கும் சமூகத்திற்கும் வெளிப்பாட்டிற்கான வாய்ப்பை வழங்கியுள்ளன. அவை அனைத்தும் நமது கலாச்சாரத்தை துடிப்பானதாகவும், நலன் சார்ந்ததாகவும் வைத்திருக்கின்றன.

மொழிகள் ஒன்றுக்கொன்று துணையாகி ஒற்றுமையின் நூலில் பிணைக்கப்பட்டு, ஒன்றாக முன்னேறி வருகின்றன என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். தெய்வப் புலவர் திருவள்ளுவரின் கருத்துகள் தெற்கில் ஆர்வத்துடன் படிக்கப்படுவதைப் போலவே வடக்கிலும் போற்றப்படுகிறார்சுப்பிரமணிய பாரதியின் தேசபக்திப் பாடல்கள் ஒவ்வொரு பிராந்திய இளைஞர்களிடமும் தேசிய பெருமையைத் தூண்டுகின்றன. கோஸ்வாமி துளசிதாஸ் ஒவ்வொரு இந்தியராலும் போற்றப்படுகிறார். புனித கபீரின் பாடல்கள் தமிழ், கன்னடம், மலையாள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சூர்தாஸின் கவிதைகள் இன்றும் தென்னிந்தியாவின் கோயில்களிலும் இசை மரபுகளிலும் பரவலாக உள்ளன. ஸ்ரீமந்த சங்கரதேவா மற்றும் மகாபுருஷ் மாதவ்தேவா ஆகியோர் ஒவ்வொரு வைஷ்ணவரும் அறிந்தவர்கள். பூபேன் ஹசாரிகாவின் பாடல்கள் ஹரியானா இளைஞர்களால் கூட முணுமுணுக்கப்படுகின்றன.

அடிமைத்தனத்தின் கடினமான காலகட்டத்தில் கூட, இந்திய மொழிகள் எதிர்ப்பின் குரலாக மாறியது. சுதந்திர இயக்கத்தை நாடு தழுவிய முயற்சியாக மாற்றுவதில் நமது மொழிகள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தன. நமது சுதந்திரப் போராளிகள் பிராந்தியங்கள் மற்றும் கிராமங்களின் மொழிகளை சுதந்திரப் போராட்டத்துடன் இணைத்தனர். இந்தியுடன் சேர்ந்து, அனைத்து இந்திய மொழிகளின் கவிஞர்கள், இலக்கியவாதிகள், நாடக ஆசிரியர்கள் விடுதலைக்காகப் போராடினர்நாட்டுப்புற மொழிகள், நாட்டுப்புறக் கதைகள், நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் நாட்டுப்புற நாடகங்கள் மூலம் அனைவரிடத்தும் சுதந்திரத்திற்கான உறுதியை அவர்கள் வலுப்படுத்தினர். 'வந்தே மாதரம்' மற்றும் 'ஜெய் ஹிந்த்' போன்ற முழக்கங்கள் நமது மொழியியல் உணர்விலிருந்து வெளிப்பட்டு சுதந்திர இந்தியாவின் பெருமையின் அடையாளங்களாக மாறின.

நாடு சுதந்திரம் பெற்றபோது, நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் மொழிகளின் ஆற்றல் மற்றும் முக்கியத்துவம் குறித்து விரிவாக விவாதித்து, 1949 செப்டம்பர் 14 அன்று தேவநாகரி எழுத்துக்களில் எழுதப்பட்ட இந்தியை அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக ஏற்றுக்கொண்டனர். அரசியலமைப்பின் பிரிவு 351, இந்தியை இந்தியாவின் கூட்டு கலாச்சாரத்தின் பயனுள்ள ஊடகமாக மாற்றுவதற்கு ஊக்குவித்து பரப்பும் பொறுப்பை வழங்குகிறது.

கடந்த பத்து ஆண்டுகளில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், இந்திய மொழிகள் மற்றும் கலாச்சாரத்தின் மறுமலர்ச்சிக்கான பொற்காலம் உருவாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மேடையாக இருந்தாலும் சரி, ஜி-20 உச்சிமாநாடாக இருந்தாலும் சரி, எஸ்சிஓ-வில் உரையாற்றினாலும் சரி, பிரதமர் திரு நரேந்திர மோடி இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் தொடர்புகொள்வதன் மூலம் இந்திய மொழிகளின் பெருமையை மேம்படுத்தியுள்ளார்.

சுதந்திரத்தின் 'அமிர்த காலத்தில்', பிரதமர் திரு நரேந்திர மோடி, ஐந்து உறுதிமொழிகளை எடுத்து, அடிமைத்தனத்தின் அடையாளங்களிலிருந்து நாட்டை விடுவித்துள்ளார். அதில் மொழிகள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. தொடர்புக்கான ஊடகமாக இந்திய மொழிகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அலுவல் மொழியான இந்தி 76 மகிமையான ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 50 பொற்கால ஆண்டுகளை நிறைவு செய்த அலுவல் மொழித் துறை, இந்தியை மக்களின் மொழியாகவும், பொது உணர்வாகவும் மாற்றுவதில் குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்துள்ளது.

2014-ம் ஆண்டு முதல், அரசுப் பணிகளில் இந்தி மொழியின் பயன்பாடு தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. 2024-ம் ஆண்டு, இந்தி தினத்தன்று, அனைத்து முக்கிய இந்திய மொழிகளுக்கும் இடையே தடையற்ற மொழிபெயர்ப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் பாரதிய பாஷா அனுபாக் நிறுவப்பட்டது. இந்தி மற்றும் பிற இந்திய மொழிகள் வெறும் தகவல் தொடர்பு ஊடகமாக மட்டுமல்லாமல், தொழில்நுட்பம், அறிவியல், நீதி, கல்வி மற்றும் நிர்வாகத்தின் அச்சாணியாக மாறுவதை உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள். டிஜிட்டல் இந்தியா, மின்-ஆளுமை, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் ஆகியவற்றின் இந்த சகாப்தத்தில், இந்திய மொழிகளை, எதிர்காலத் திறன் கொண்டதாகவும், அதற்குப் பொருத்தமானதாகவும், இந்தியாவை உலகளாவிய தொழில்நுட்பப் போட்டியில் முன்னணியில் கொண்டு வருவதற்கான உந்து சக்தியாகவும் வளர்த்து வருகிறோம்.

நண்பர்களே, மொழி என்பது ஒரு பருவமழைத் துளி போன்றது. அது மனதின் துக்கத்தையும் மனச்சோர்வையும் கழுவி, புதிய ஆற்றலையும் உயிர்ச்சக்தியையும் தருகிறது. குழந்தைகளின் கற்பனையிலிருந்து உருவாக்கப்பட்ட தனித்துவமான கதைகள் முதல் பாட்டிகளின் தாலாட்டுப் பாடல்கள் மற்றும் கதைகள் வரை, இந்திய மொழிகள் எப்போதும் சமூகத்திற்கு உயிர் மற்றும் தன்னம்பிக்கையின் மந்திரத்தை அளித்துள்ளன.

மிதிலாவின் கவிஞர் வித்யாபதி ஜி சரியாகச் சொன்னார்:

அதாவது, ஒருவரின் சொந்த மொழியே மிகவும் இனிமையானது.

இந்தி தினத்தில், இந்தி உட்பட அனைத்து இந்திய மொழிகளையும் மதித்து, தன்னம்பிக்கையை வளர்த்து, வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கி முன்னேறுவோம்.

மீண்டும் ஒருமுறை, இந்தி தினத்தன்று உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

வந்தே மாதரம்.

***

(Release ID: 2166447)

AD/PKV/RJ


(Release ID: 2166505) Visitor Counter : 2