பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மோகன் பகவத் அவர்களின் 75-வது பிறந்த தினத்தையொட்டி அவருக்கு எழுதியுள்ள வாழ்த்துரையை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்

Posted On: 11 SEP 2025 8:57AM by PIB Chennai

மோகன் பகவத் அவர்களின் 75-வது பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கட்டுரை ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ள  அவர், தேசிய சேவையில் எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி உறுதியுடன் செயல்பட்டதாகவும் அவரது வாழ்க்கை அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். பாரத அன்னைக்கு தொடர்ந்து சேவை செய்யும் வகையில் அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுள் வாழ இறைவனை பிரார்த்திப்பதாக பிரதமர் கூறியுள்ளார். சமூக மாற்றத்திற்காகவும், நல்லிணக்கம் மற்றும் சகோதர உணர்வை வலுப்படுத்துவதற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

வசுதைவ குடும்பகம் என்ற தத்துவத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்ட திரு மோகன் பகவத் அவர்கள் சமுதாய மாற்றத்திற்காகவும், நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வை வலுப்படுத்துவதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். அவரது 75-வது பிறந்த தினமான இந்த சிறப்பு வாய்ந்த தருணத்தில் அவரது சில சிந்தனைகள் மற்றும் தனித்துவ பண்புகள் குறித்து குறிப்பிட விரும்புகிறேன். பாரத அன்னைக்கு சேவையாற்றுவதற்காக அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுள் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

***

(Release ID: 2165507)

AD/SV/AG/KR


(Release ID: 2165678) Visitor Counter : 2