பிரதமர் அலுவலகம்
மன்னிப்பு, இரக்கம் மற்றும் பணிவுக்கான அழைப்பு விடுக்கும் சம்வத்சரி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
27 AUG 2025 6:20PM by PIB Chennai
புனிதமான சம்வத்சரி பண்டிகையை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி அனைத்துக் குடிமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மன்னிப்பு, இரக்கம், நேர்மையான மனிதத் தொடர்பு ஆகிய காலத்தால் அழியாத மாண்புகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் எழுதியிருப்பதாவது:
"சம்வத்சரி என்பது மன்னிப்பின் அழகையும் இரக்கத்தின் சக்தியையும் நினைவூட்டுவது. இது நேர்மையுடன் மக்களிடையே பிணைப்புகளை வளர்க்க ஊக்கப்படுத்துகிறது. இந்தப் புனிதமான நிகழ்வை நாம் கொண்டாடும்போது, நம் இதயங்கள் பணிவால் நிரம்பட்டும், நமது செயல்கள் கருணை மற்றும் நல்லெண்ணத்தைப் பிரதிபலிக்கட்டும். மிச்சாமி துக்காதாம்!"
*****
(Release ID: 2161294)
AD/SMB/DL
(Release ID: 2161328)