பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

எளிதான வாழ்க்கை மற்றும் வணிகத்தை எளிதாக்குவதை விரைவுபடுத்துவதற்கான அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் குறித்த உயர்மட்டக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது

Posted On: 18 AUG 2025 8:40PM by PIB Chennai

எளிதான வாழ்க்கை முறையை மேம்படுத்துதல், வணிகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் உள்ளடக்கிய வளமான வாழ்வை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களுக்கான செயல்திட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உயர்மட்டக் கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்கினார்.

எக்ஸ் சமூக ஊடகத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களுக்கான செயல்திட்டம் குறித்து விவாதிக்க நடைபெற்ற ஒரு கூட்டத்திற்கு தலைமை தாங்கினேன். எளிதான வாழ்க்கை முறையை மேம்படுத்துதல், வணிகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் வளமான வாழ்வை உறுதிப்படுத்த அனைத்துத் துறைகளிலும் விரைவான சீர்திருத்தங்களை மேற்கொள்ள நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.”

***

AD/SM/ DL


(Release ID: 2157747)