பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திருமதி பிரமிளா தை மேதேவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 31 JUL 2025 7:28PM by PIB Chennai

ராஷ்டிர சேவிகா சமிதியின் தலைமை நிர்வாகி திருமதி பிரமிளா தாய் மேதேவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது முன்மாதிரியான வாழ்க்கை, குறிப்பாக அனைவரையும் உள்ளடக்கிய சமூக மேம்பாடு மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவை, வரும் தலைமுறைகளுக்கு உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக விளங்குகின்றன என்று பிரதமர் வலியுறுத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியதாவது:

"ராஷ்டிர சேவிகா சமிதியின் தலைமை நிர்வாகி பிரமிளா தாய் மேதேவின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். அவரது முழு வாழ்க்கையும் சமூகத்திற்கும் தேசிய சேவைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. பெண்களுக்கு அதிகாரமளித்ததுடன் சமூகப் பணிக்கும் அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். இந்தத் துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!"

***

(Release ID: 2150979)

AD/RB/DL


(Release ID: 2151114)