பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புனித பிரகாஷ் புரப் தினத்தில் ஸ்ரீ குரு தேக் பகதூருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

Posted On: 18 APR 2025 12:26PM by PIB Chennai

புனிதமான பிரகாஷ் புரப் தினமான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி ஸ்ரீ குரு தேக் பகதூருக்கு  மரியாதை செலுத்தியுள்ளார். அநீதியை எதிர்த்துப் போராடுவதில் தளராத துணிச்சலையும்  கருணை நிறைந்த சேவையையும் குரு தேக் பகதூரின் வாழ்க்கை எடுத்துக்காட்டுகிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"குரு தேக் பகதூரின் புனிதமான பிரகாஷ் புரப் நாளில், நமது நாட்டின் மிகப்பெரிய ஆன்மீக வழிகாட்டிகளில் ஒருவரான அவருக்கு எனது தாழ்மையான மரியாதையைச் செலுத்துகிறேன். அவரது வாழ்க்கை தைரியம், இரக்கமுள்ள சேவை ஆகியவற்றின் உருவகமாகும். அநீதியை எதிர்த்துப் போராடுவதில் அவர் உறுதியாக இருந்தார். அவர் கனவு கண்ட ஒரு சமூகத்தை உருவாக்க அவரது போதனைகள் நம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்."

***

(Release ID: 2122622)

SV/PLM/RJ


(Release ID: 2122645) Visitor Counter : 16