பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

துபாய் பட்டத்து இளவரசருடன் பிரதமர் சந்திப்பு

இந்தியா-ஐக்கிய அரபு அமீரக உறவுகளை வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துதல்

Posted On: 08 APR 2025 4:07PM by PIB Chennai

துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூமை பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் சந்தித்தார். இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே உறவுகளை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை திரு மோடி மீண்டும் வலியுறுத்தினார். இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான விரிவான உத்திபூர்வ கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்வதில் துபாய் முக்கியப் பங்கு வகித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;

"துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூமை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே விரிவான உத்திசார் கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்வதில் துபாய் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தச் சிறப்புப் பயணம் நமது ஆழமான வேரூன்றிய நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்துவதுடன், எதிர்காலத்தில் இன்னும் வலுவான ஒத்துழைப்புக்கு வழி வகுக்கும்”.

***

(Release ID: 2120045)
TS/PKV/RR/KR

 


(Release ID: 2120077)