பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தியாகிகள் தினத்தை முன்னிட்டு பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோருக்கு பிரதமர் மரியாதை

Posted On: 23 MAR 2025 9:04AM by PIB Chennai

 

சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தியாகிகள் தினத்தில் மரியாதை  செலுத்தி, தேசத்துக்காக அவர்கள் செய்த உச்சபட்ச தியாகத்தைப் போற்றியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;

"இன்று, பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோரின் உன்னத தியாகத்தை நமது தேசம் நினைவுகூர்கிறது.  அச்சமின்றி சுதந்திரம் மற்றும் நீதிக்காக அவர்கள் நடத்தியபோராட்டம்  நம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.".

***

PKV/KV

 


(Release ID: 2114140) Visitor Counter : 40