பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

​​​​​​​குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்கேற்ற தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்களுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்

Posted On: 25 JAN 2025 3:52PM by PIB Chennai

பங்கேற்பாளர் – ஐயா, இன்று உங்களைப் பார்த்த பிறகு என் கனவு நனவாகியுள்ளது.

பிரதமர் - அப்படியா? என்ன சொல்கிறீர்கள்?

பங்கேற்பாளர் - உங்களைப் பார்க்கும்போது மிகப்பெரிய ஹீரோவை சந்தித்தது போல் உணர்கிறேன்.

பங்கேற்பாளர் - இங்கு வந்து அனைத்தையும் பார்க்க வேண்டும் என்பது எனது மிகப்பெரிய கனவாக இருந்தது, குறிப்பாக நான் உங்களைப் பார்க்க வந்துள்ளேன்.

பிரதமர் - ஆமாம், ஆமாம்.

பங்கேற்பாளர் -  உங்களுடன் நேருக்கு நேர் பேசுகிறேன் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.

பிரதமர் – இதுதான் இந்திய ஜனநாயகத்தின் பலம்.

பங்கேற்பாளர் - மிக்க நன்றி ஐயா.

பிரதமர் – வேறொரு மாநிலத்தைச் சேர்ந்த நண்பரிடம் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதன் மூலம், அந்த மாநிலத்தை அறிந்து கொள்ள முயற்சித்தீர்கள். மேலும் அந்த மொழியில் ஓரிரு வாக்கியங்களைப் பேசக் கற்றுக்கொண்டீர்கள். இங்க யாரெல்லாம் இப்படிப்பட்ட அனுபவங்களை சந்தித்தீர்கள்?

பங்கேற்பாளர் – ஐயா, நாங்கள் மேற்கு வங்கத்திலிருந்து இங்கே அமர்ந்திருக்கிறோம். நான் மற்றவர்களிடமிருந்து தெரிந்து கொள்ள முயற்சித்தேன். நாங்கள் சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அது தொடர்பான ஒரு வாக்கியம் தெரிந்து கொண்டேன்.

பங்கேற்பாளர் – நான் முங்கேரைச் சேர்ந்தவன், முங்கர் மக்கள் அனைவரின் சார்பாக உங்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன்.

பிரதமர் - முங்கர் பகுதிக்கு எனது வணக்கங்கள். முங்கர் நிலம் யோகாவுக்காக உலகம் முழுவதும் அறியப்படுகிறது.

பங்கேற்பாளர் - ஆமாம் சார்.

பிரதமர் – அப்படியென்றால் நீங்கள் இங்கு அனைவருக்குமான யோகா குருவாக மாறிவிட்டீர்களா?.

பங்கேற்பாளர் - அப்படியென்றால் என்னால் எல்லோருக்கும் குருவாக ஆக முடியாது சார்.. ஆனால் எங்கள் வட்டத்தில் இருப்பவர்களுக்கு, பயிற்சி அளிக்க முடியும்.

தற்போது ஒட்டுமொத்த உலகமும் யோகாவுடன் இணைந்துள்ளது

பிரதமர் - ஆம்.

பங்கேற்பாளர் - தூய்மை இந்தியா இயக்கம், ஆரோக்கியமான இந்தியா இயக்கம் என நீங்கள் தொடங்கிய பயணங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு நிச்சயமாக உதவியுள்ளன. அத்துடன், இளைஞர்கள் உங்களிடம் மிகவும் ஈர்க்கப்படுகிறார்கள். ஒரு காந்தம் போல எல்லோரும் உங்களை சந்திக்க விரும்புகிறார்கள். 

பிரதமர் – தூய்மை இந்தியாவை உருவாக்க ஏதாவது ஒரு கொள்கையை நாம் செயல்படுத்த வேண்டும் என்றால், அது எது?

பங்கேற்பாளர் –  மற்றவர்களையும் ஊக்குவிக்க விரும்புகிறோம்.

பிரதமர் – பாருங்கள், நீங்கள் சொன்னது சரிதான். இந்தியாவை தூய்மையானதாக மாற்ற, 140 கோடி மக்களும் இணைய வேண்டும்.

பங்கேற்பாளர் - ஜெய் ஹிந்த் சார், சார் நான் ஒடிசாவிலிருந்து சுஷ்மிதா ரோஹிதாஷ் பேசுகிறேன்.

பிரதமர் - ஜெய் ஜெகன்நாத்.

பங்கேற்பாளர் - ஜெய் ஜகந்நாதர் சார். நீங்கள்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். எனவே, வாழ்க்கையில் வெற்றி பெற நான் என்ன செய்ய வேண்டும்? வெற்றியின் உண்மையான விளக்கம் என்ன?

பிரதமர் - தோல்வியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. தோல்வியை ஏற்றுக்கொண்டு தோல்வியில் அடைக்கலம் புகுபவர்கள் ஒருபோதும் வெற்றியை அடைவதில்லை. ஆனால் தோல்வியில் இருந்து கற்றுக் கொள்பவர்கள் உச்சியை அடைகிறார்கள். எனவே தோல்வியைக் கண்டு ஒருபோதும் பயப்படக்கூடாது. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஒருவருக்கு இருக்க வேண்டும். 

பங்கேற்பாளர்: ஐயா, உங்களிடம் எனது கேள்வி என்னவென்றால், உங்களுக்கு மூன்று முதல் நான்கு மணி நேரம் மட்டுமே ஓய்வு கிடைக்கும் என்று நான் கேள்விப்பட்டேன். எனவே இந்த வயதில் உங்களுக்கு உந்துதலும் வலிமையும் எங்கிருந்து கிடைக்கும்?

பிரதமர் - இது ஒரு கடினமான கேள்வி. உங்களைப் போன்ற இளைஞர்களை சந்திக்கும் போது, எனக்கு ஆற்றல் கிடைக்கிறது. உங்கள் அனைவரையும் பார்க்கும் போது, எனக்கு உத்வேகம் ஏற்படுகிறது. நாட்டின் விவசாயிகளை நான் நினைக்கும் போது, அவர்கள் எத்தனை மணி நேரம் வேலை செய்கிறார்கள் என்பது பற்றி நினைத்துப் பார்க்கிறேன். நான் நாட்டின் ராணுவ வீரர்களை நினைக்கும் போது, அவர்கள் எத்தனை மணி நேரம் எல்லையில் நிற்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். அதாவது எல்லோரும் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள், உழைக்கிறார்கள். நாம் அவர்களைக் கொஞ்சம் பார்த்தால், அவர்களின் வாழ்க்கையை வாழ முயற்சித்தால், அவர்களைத் தெரிந்துகொள்ள முயற்சித்தால், நமக்குத் தூங்க உரிமை இல்லை, ஓய்வெடுக்க நமக்கு உரிமை இல்லை என்று உணர்கிறோம். 140 கோடி நாட்டுமக்கள் எனக்கு ஒரு கடமையை வழங்கியுள்ளனர். சரி, நீங்கள் காலை 4 மணிக்கு எழுந்திருக்க வேண்டுமா அல்லது நீங்கள் எழுந்திருக்க வேண்டுமா?

பங்கேற்பாளர்: நான் எழுந்திருக்க வேண்டும் சார்.

பிரதமர் - அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம் வாழ்க்கையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், நானும் உங்களைப் போலவே ஒரு என்சிசி கேடட் என்று சொல்ல முடியும். எனவே இந்த விஷயம் இப்போது வரை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஏனென்றால் நாங்கள் முகாமுக்குச் செல்லும்போது, நாங்கள் சீக்கிரமே எழுந்திருக்க வேண்டியிருந்தது. எனவே ஒழுக்கமும் வந்தது. அதிகாலையில் எழுந்திருக்கும் என் பழக்கம் இன்னும் எனக்கு ஒரு பெரிய சொத்து. உலகம் விழித்தெழுவதற்குள் நான் எனது பல வேலைகளை முடித்துவிடுவேன். நீங்களும் சீக்கிரம் எழுந்திருக்கும் பழக்கத்தை கடைபிடித்தால், அது  உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பங்கேற்பாளர் - நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன், சத்ரபதி சிவாஜி மகாராஜாவைப் போல யாராவது சுயராஜ்யத்தை உருவாக்க முடியும் என்றால், அது நரேந்திர மோடி தான்.

பிரதமர் - நாம் அனைவரிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும். சத்ரபதி சிவாஜி மகராஜிடமிருந்தும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் இங்கு என்ன கற்றுக்கொண்டீர்கள் என்று கூற முடியுமா?

பங்கேற்பாளர் - ஐயா, இங்கே பல்வேறு நபர்களுடன் நட்பு கொள்வது, அவர்களுடன் பேசுவது, அவர்களுடன் கலந்து பழகுவது, ஒட்டுமொத்த இந்தியாவும் ஒன்றிணைவது குறித்து தெரிந்து கொண்டோம்.

பங்கேற்பாளர் - ஐயா, நான் அடிப்படையில் ஒரு காஷ்மீர் பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் ஒன்பதாம் வகுப்பில் பயில்கிறேன். நான் எந்த வீட்டு வேலைகளையும் செய்ததில்லை. ஏனென்றால் நான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். பின்னர் திரும்பி வந்த பிறகு, நான் படிக்கிறேன். டியூஷன் செல்கிறேன். ஆனால் இங்கு வந்த பிறகு நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய விஷயம் சுய சுதந்திரமாக இருப்பதுதான். நான் இங்குள்ள அனைத்து வேலைகளையும் கற்றுக்கொண்டேன். நான் வீட்டிற்கு சென்றவுடன், படிப்புடன் என் அம்மாவுக்கு  உதவுவேன்.

பிரதமர் – பாருங்கள், உங்களுடைய இந்த வீடியோ உங்கள் தாயை சென்றடையப் போகிறது.

பங்கேற்பாளர் - இங்கு வந்த பிறகு நான் கற்றுக்கொண்ட முதல் விஷயம் என்னவென்றால், குடும்பம் என்பது எப்போதும் வீட்டில் நம்முடன் வசிப்பவர்கள் அல்ல. எங்கள் நண்பர்கள், இங்குள்ள மூத்தவர்கள், அவர்கள் அனைவரும் ஒரு மிகப் பெரிய குடும்பத்தை உருவாக்குகிறார்கள். இது நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் ஒரு விஷயம். இங்கு வந்த பிறகு நான் கற்றுக்கொண்டேன்.

பிரதமர் - ஒரே இந்தியா, மகத்தான இந்தியா.

பங்கேற்பாளர் - ஆமாம் ஐயா.

பிரதமர் - சரி, இந்த 30 நாட்களில், அணிவகுப்பில் பங்கேற்க சிலருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். சிலருக்கு அது கிடைத்திருக்காது, இல்லையா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், 

பங்கேற்பாளர் - ஐயா, தேர்வு செய்யப்படுகிறோமா? இல்லையா? என்பது வேறு விஷயம். ஆனால் அதற்காக முயற்சி செய்வது மிகப் பெரிய விஷயம் சார்.

பிரதமர் –  நீங்கள் சீருடை அணிவதை ரசிக்கிறீர்களா அல்லது கலாச்சார நிகழ்ச்சிகளை ரசிக்கிறீர்களா?

பங்கேற்பாளர்கள்- இரண்டையும்.

பிரதமர் – அப்போ நீங்க இங்க வந்து ஒரு மாதம் ஆகிறது. வீட்டுடன் வீடியோ கான்பரன்சிங் பண்ணிக்கிட்டு இருக்கீங்களா?

பங்கேற்பாளர் - ஆமாம் சார்.

பிரதமர் – நண்பர்களுடன் வீடியோ கான்பரன்சிங் செய்தீர்களா?

பங்கேற்பாளர் - ஆமாம் சார்.

பிரதமர் - உங்களால் ஏன் இப்படி செய்ய முடிகிறது தெரியுமா?  தொழில்நுட்பம், டிஜிட்டல் இந்தியா, வளர்ந்த இந்தியா. டேட்டா மிகவும் மலிவாக இருக்கும் நாடுகளாக இந்தியா போல உலகில் வெகு சில நாடுகளே உள்ளன. எனவே ஏழைகளில் ஏழைகள் கூட தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் எளிதாக பேச முடிகிறது. உங்களில் எத்தனை பேர் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு யுபிஐ ஐப் பயன்படுத்துகிறீர்கள்?  புதிய தலைமுறையினர் தங்கள் பாக்கெட்டில் பணத்தை கூட வைத்திருப்பதில்லை! என்சிசி மூலம் உங்களுக்கு ஒரு நல்ல விஷயங்கள் கிடைத்துள்ளன. இதற்கு முன்பு உங்களிடம் இல்லாதது என்ன?

பங்கேற்பாளர் - ஜெய்ஹிந்த் சார், நேரம் தவறாமை, நேர மேலாண்மை, மூன்றாவது தலைமைத்துவம்.

பிரதமர் - சரி, வேறு என்னென்ன கற்றுக் கொண்டீர்கள்?.

பங்கேற்பாளர்: ஐயா, என்சிசி எனக்கு கற்றுக் கொடுத்த சிறந்த விஷயம் என்னவென்றால், ரத்த தான முகாம்கள் போன்ற பொது சேவை, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பது.

பிரதமர் – எனது பாரதம் மேரா யுவ பாரத், மை பாரத் என்பது இந்திய அரசால் நடத்தப்படும் ஒரு தளமாகும். இதுவரை, நாட்டின் மூன்று கோடிக்கும் அதிகமான இளைஞர்கள், பெண்கள் இதில் பதிவு செய்துள்ளனர். தேசிய மாணவர் படையில் நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்களோ, அது சில ஆண்டுகளுக்கு உங்களுடன் இருக்கும். ஆனால் மை பாரத் தளம் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருக்கும்.

பங்கேற்பாளர் - ஆமாம் சார்.

பிரதமர் - அப்போ நீங்க ஏதாவது செய்வீங்களா?

பங்கேற்பாளர் - ஆமாம் சார்.

பிரதமர் - அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கு என்ன தெரியுமா? தயவுசெய்து உங்கள் கையை உயர்த்தி சத்தமாக சொல்லுங்கள்.

பங்கேற்பாளர் - வளர்ந்த இந்தியா.

பிரதமர்: எந்த ஆண்டு என்று குறிப்பிடுங்கள்.

பங்கேற்பாளர்கள் - 2047!

பிரதமர் – சரி, இந்த 2047 ஆம் ஆண்டு ஏன் முடிவு செய்யப்பட்டது?

பங்கேற்பாளர்கள் - நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும்.

பிரதமர்: அதுவரை நமது இலக்கு என்ன?

பங்கேற்பாளர் - வளர்ந்த இந்தியா.

பிரதமர் - இந்த நாடு வளர்ச்சி அடைய வேண்டும். யார் வளர்ச்சி அடையச் செய்வார்கள்?

பங்கேற்பாளர்கள்- நாங்கள் அதை உருவாக்குவோம்.

பிரதமர் – அரசு தனியாக இதைச் செய்ய வேண்டுமா?

பங்கேற்பாளர் - இல்லை சார்.

பிரதமர் – 140 கோடி குடிமக்களும் இதை முடிவு செய்து, ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்யும்போது, இந்தப் பணி கடினமானதல்ல. 

பங்கேற்பாளர் - நான் அருணாச்சல பிரதேசத்திலிருந்து வருகிறேன். பிரதமர் மோடி ஜி அரசு அமைந்ததிலிருந்து, நாடு வேகமாக முன்னேறி வருகிறது. நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஒவ்வொருவரும் அதை அறிவார்கள்.

பிரதமர் – அருணாச்சலத்தில் ஒரு சிறப்பு உள்ளது. இந்தியாவில் சூரியனின் முதல் கதிர் விழும் இடம் நமது அருணாச்சல பிரதேசம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  நீங்கள் பன்முகத்தன்மை, கலை, இயற்கை அழகு, அங்குள்ள மக்களின் அன்பு ஆகியவற்றைக் காண விரும்பினால், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அசாம், மேகாலயா ஆகியவற்றைப் பார்வையிடுங்கள்.  எங்கள் அஷ்ட லட்சுமியின் இந்த முழு பகுதியும் அழகாக இருக்கிறது, நீங்கள் அனைத்தையும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பார்க்க முடியாது. பார்க்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.

பிரதமர் – உங்கள் பகுதியில் நீங்கள் பணிபுரியும் நாட்டு நலப்பணித்திட்ட குழுவில் உங்கள் பிரிவு என்ன வகையான பணிகளைச் செய்திருக்கிறது? 

பங்கேற்பாளர்: ஐயா, நான் சொல்ல விரும்புகிறேன் !

பிரதமர் - நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?

பங்கேற்பாளர் – சார் என் பெயர் அஜய் மோடி. நான் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவன்.  எனது யூனிட் செய்த சிறந்த வேலை, நீங்கள் சொன்னது போல், பாராட்டப்பட்டது.  எங்கள் தும்காவில் ஒரு மஹிரி சமூகம் உள்ளது. அவர்கள் மூங்கில் பொருட்களை நன்றாக செய்கிறார்கள். ஆனால் அவை பருவகாலங்களில் மட்டுமே விற்கப்படுகின்றன. எனவே, இந்த வகையான வேலையைச் செய்யும் சிலரை நாங்கள் கண்டறிந்து, ஊதுபத்திகளைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளுடன் அவர்களை இணைத்தோம்.

பிரதமர் - ரொம்ப நல்லது.

பங்கேற்பாளர்- நான் நேபாளத்தைச் சேர்ந்த ரோஜினா பான். இந்தியாவுக்கு வருகை தரவும், உங்களைப் பார்க்கவும் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருந்தோம். உங்கள் விருந்தோம்பலுக்கு மிக்க நன்றி.

பங்கேற்பாளர்- நாங்கள் புறப்படுவதற்கு முன்னதாக மொரீஷியஸுக்கான இந்திய தூதரகம் எங்களை வரவேற்றது. அதனால இந்தியாவுக்கு போங்க, இது உங்க ரெண்டாவது வீடுன்னு சொன்னாரு. அவர் சொல்லுவது சரி.

பிரதமர் - வாழ்த்துக்கள்!

பங்கேற்பாளர்- நன்றி ஐயா.

பிரதமர் - மிக்க நன்றி..மிக்க நன்றி.

*****  

PLM/KV


(Release ID: 2105646)