பிரதமர் அலுவலகம்
செயற்கைக்கோள்களை விண்வெளியில் ஒருங்கிணைக்கும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
16 JAN 2025 1:36PM by PIB Chennai
செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக நிலைநிறுத்தும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், விண்வெளித் துறையினருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியாவின் லட்சிய விண்வெளிப் பயணங்களுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என்று கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"செயற்கைக்கோள்களை ஒருங்கிணைப்பதை வெற்றிகரமாக செயல்படுத்திய இஸ்ரோ (@isro) விஞ்ஞானிகளுக்கும், ஒட்டுமொத்த விண்வெளித் துறையினருக்கும் வாழ்த்துகள். வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியாவின் லட்சிய விண்வெளி பயணங்களுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.”
***
ST/PLM/RS/KV
(வெளியீட்டு அடையாள எண்: 2093377)
வருகையாளர் எண்ணிக்கை : 72
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam