பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த இளம் தலைவர்கள் உரையாடல் நிகழ்ச்சி, இளையோர் சக்தியையும், அவர்களின் கனவுகள், திறன்கள், விருப்பங்களையும் கொண்டாடுகிறது: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 10 JAN 2025 7:24PM by PIB Chennai

வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த இளம் தலைவர்கள் பங்கேற்கும் உரையாடல் நிகழ்ச்சி இளையோர் சக்தியையும், அவர்களின் கனவுகள், திறன்கள், விருப்பங்களையும் கொண்டாடுகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.

2025-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி  இளைஞர்களுடன்  கலந்துரையாடுவதை தாம் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாகவும் திரு மோடி கூறினார்.

வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த  இளம் தலைவர்களின் உரையாடல் நிகழ்வு தொடர்பாக மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள  பதிவிற்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி இந்த கருத்தை  பதிவிட்டுள்ளார்.

***

SV/AG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2091913) வருகையாளர் எண்ணிக்கை : 68