பிரதமர் அலுவலகம்
உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்; கருணைத் தொகை அறிவிப்பு
प्रविष्टि तिथि:
06 DEC 2024 8:05PM by PIB Chennai
உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் திரு நரேந்திர மோடி அறிவித்தார்.
இது குறித்துப் பிரதமர் அலுவலகம், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகள் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி வருகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000 வழங்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி @narendramodi"
***
PLM /DL
(रिलीज़ आईडी: 2081866)
आगंतुक पटल : 53
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam