பிரதமர் அலுவலகம்
நீடித்த நிலைத்தன்மையை ஊக்குவிப்பதற்கும், வரும் தலைமுறையினர் பசுமையான எதிர்காலத்தில் பங்கேற்பதற்குமான நமது முயற்சிகளின் ஒரு பகுதியே, பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் செல் பேருந்து: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
21 OCT 2024 8:07PM by PIB Chennai
பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் செல் பேருந்தில் பூட்டான் பிரதமர் திரு ஷெரிங் டோப்கே பயணம் செய்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, நீடித்த நிலைத்தன்மையை ஊக்குவிப்பதற்கும், வரும் தலைமுறையினர் பசுமையான எதிர்காலத்தில் பங்கேற்பதற்கும் இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் செல் பேருந்து விளங்குகிறது என்று குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவிற்கு பதிலளித்து திரு மோடி கூறியதாவது:
"பிரதமர் ஷெரிங் டோப்கே, பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் செல் பேருந்தில் அமர்ந்தது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இத்தகைய பேருந்து, நிலைத்தன்மையை ஊக்குவிப்பதற்கும், வரும் தலைமுறையினர் பசுமையான எதிர்காலத்தில் பங்கேற்பதற்குமான நமது முயற்சிகளின் ஒரு பகுதியாகும். @tsheringtobgay"
BR/KR
***
(வெளியீட்டு அடையாள எண்: 2066934)
வருகையாளர் எண்ணிக்கை : 119
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
Urdu
,
English
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam