பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

டாடா சன்ஸ் மற்றும் பி.எஸ்.எம்.சி.யின் தலைமைக் குழுவுடன் பிரதமர் சந்திப்பு

Posted On: 26 SEP 2024 8:51PM by PIB Chennai

டாடா சன்ஸ் மற்றும் பி.எஸ்.எம்.சி.யின் தலைமைக் குழுவினரை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இந்தியாவில் குறைக்கடத்தி உற்பத்தித் திட்டங்கள் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதம் கவனம் செலுத்தியது. பி.எஸ்.எம்.சி, இந்தியாவில் தனது தடத்தை மேலும் விரிவுபடுத்த உற்சாகம் தெரிவித்தது.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"டாடா சன்ஸ் மற்றும் பி.எஸ்.எம்.சியின் தலைமைக் குழுவுடனான சந்திப்பு சிறப்பானதாக அமைந்தது. அவர்கள் தங்கள் குறைக்கடத்தி உற்பத்தித் திட்டங்கள் குறித்த சமீபத்திய தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். பி.எஸ்.எம்.சி, இந்தியாவில் தனது தடத்தை மேலும் விரிவுபடுத்த உற்சாகம் தெரிவித்தது.”

***

(Release ID: 2059246)
BR/KR



(Release ID: 2059313) Visitor Counter : 24