பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்

Posted On: 25 SEP 2024 9:08AM by PIB Chennai

பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் ஏழைகள் நலனுக்கான கோட்பாடு வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் விலைமதிப்பற்ற பங்கை வகிக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

 

"மாபெரும் தேசியவாத சித்தாந்தவாதியான பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் பிறந்த நாளான இன்று அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். ஏழைகள் முன்னேற்றத்திற்கான அவரது கோட்பாடு வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் விலைமதிப்பற்ற பங்கை ஆற்றப் போகிறது. நாட்டுக்கான அவரது அர்ப்பணிப்பும் சேவையும் என்றென்றும் நினைவுகூரப்படும்.”

 

***

(Release ID: 2058433)
PLM/RR/KR

 



(Release ID: 2058480) Visitor Counter : 34