பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

லக்னோ விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல்

प्रविष्टि तिथि: 08 SEP 2024 1:13PM by PIB Chennai

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இன்று கட்டடம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் உதவித் தொகை வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நிகழ்ந்த கட்டட விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகள் வருத்தமளிக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்காக பிரார்த்தனைகள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி ( @narendramodi )"

***

PLM/DL


(रिलीज़ आईडी: 2052919) आगंतुक पटल : 89
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam