பிரதமர் அலுவலகம்

ஸ்ரீ குரு கிரந்த் சாஹிபின் பிரகாஷ் பூராப்பை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

Posted On: 04 SEP 2024 3:00PM by PIB Chennai

ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் பிரகாஷ் பூராப் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி  இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களை, பிறருக்கு சேவை செய்யவும், அக்கறை காட்டவும், சமூகத்தில் சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் பிணைப்புகளை மேலும் மேம்படுத்தவும் ஊக்குவிக்கிறது என்று திரு மோடி கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

"ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்பின் பிரகாஷ் பூராபுக்கு எனது வாழ்த்துகள்.

ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களை ஊக்குவிப்பதுடன், பிறருக்கு சேவை செய்யவும், பராமரிக்கவும் மக்களை ஊக்குவிக்கிறது. நமது சமூகத்தில் சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் பிணைப்பை மேலும் மேம்படுத்தவும், இது நமக்கு போதிக்கிறது. நமது கிரகத்தை சிறந்ததாக மாற்றுவதற்கான நமது முயற்சிகளில், அதன் ஞானம் தொடர்ந்து நம்மை வழிநடத்தட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

***

(Release ID: 2051710)

MM/AG/KR



(Release ID: 2051735) Visitor Counter : 21