தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

தொலைத்தொடர்பு சேவை அணுகல் வழங்குவோர் முறைகேடு செய்ததற்காக டிராய் உத்தரவின் பேரில் 50 நிறுவனங்களை தடைப்பட்டியலில் சேர்த்துள்ளனர்

Posted On: 03 SEP 2024 3:18PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஸ்பேம் அழைப்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கவனித்துள்ளது, 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் (ஜனவரி முதல் ஜூன் வரை) பதிவு செய்யப்படாத டெலிமார்க்கெட்டர்களுக்கு (UTMs) எதிராக 7.9 லட்சத்துக்கும் அதிகமான புகார்கள் பதிவாகியுள்ளன.

இந்தப் பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொண்டு, அனைத்து அணுகல் வழங்குநர்களுக்கும் 13ஆகஸ்ட் 2024 அன்று TRAI கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தது. SIP, PRI அல்லது பிற தொலைத் தொடர்பு வளங்களைப் பயன்படுத்தி, பதிவு செய்யப்படாத அனுப்புநர்கள் அல்லது டெலிமார்க்கெட்டர்களிடமிருந்து விளம்பர குரல் அழைப்புகளை உடனடியாக நிறுத்துமாறு அணுகல் வழங்குநர்களை இது கட்டாயப்படுத்தியுள்ளது. இந்த வளங்களை தவறாகப் பயன்படுத்துவதாகக் கண்டறியப்பட்ட எந்தவொரு யுடிஎம்மும் இரண்டு ஆண்டுகள் வரை அனைத்து தொலைத் தொடர்பு வளங்களையும் துண்டிப்பது மற்றும் தடைப்பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட கடுமையான விளைவுகளை எதிர்கொள்ளும்.

இந்த உத்தரவுகளின் விளைவாக, சேவை அணுகல் வழங்குவோர், ஸ்பேமிங் செய்வதற்கு தொலைத்தொடர்பு வளங்களை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை தடுப்புப்பட்டியலில் சேர்த்துள்ளனர். 2.75 லட்சத்துக்கும் மேற்பட்ட SIP DID/மொபைல் எண்கள் / தொலைத்தொடர்பு வளங்களை துண்டித்துள்ளனர். இந்த நடவடிக்கைகள் ஸ்பேம் அழைப்புகளைக் குறைப்பதிலும்,  நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பங்குதாரர்களும் உத்தரவுகளுக்கு இணங்கவும், தூய்மையான மற்றும் திறமையான தொலைத் தொடர்பு சுற்றுச்சூழல் அமைப்புக்கு பங்களிக்கவும் டிராய் கேட்டுக்கொண்டுள்ளது.

***

MM/AG/KR/DL



(Release ID: 2051447) Visitor Counter : 25