பிரதமர் அலுவலகம்

பாராலிம்பிக்கில் 100 மீட்டர் டி35 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய தடகள வீராங்கனை பிரீத்தி பாலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

Posted On: 30 AUG 2024 6:19PM by PIB Chennai

பாரிஸ் பாராலிம்பிக் 2024-ல் மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டப் (டி35 பிரிவு) போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய தடகள வீராங்கனை பிரீத்தி பாலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

"2024 பாராலிம்பிக்ஸில் (#Paralympics2024) நடைபெற்ற 100 மீட்டர் டி35 போட்டியில் ப்ரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்றது இந்தியாவுக்கு மேலும் பெருமை அளிக்கும் விஷயம்.

அவருக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி நிச்சயமாக வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும்.

#Cheer4Bharat"

 

********

PLM/DL



(Release ID: 2050296) Visitor Counter : 42