பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

எரிவாயு உற்பத்தியில் சாதனை எட்டப்பட்டுள்ளதற்காக மக்களுக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

Posted On: 04 AUG 2024 9:27PM by PIB Chennai

எரிவாயு உற்பத்தித் துறையில் தற்சார்பு நிலையை நோக்கி புதிய சாதனை படைத்துள்ள மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வளர்ந்த இந்தியாவை உருவாக்க எரிசக்தித் துறையில் தற்சார்பு மிகவும் முக்கியமானது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தமது சமூக வலைதளப் பதிவில், எரிவாயு உற்பத்தித் துறையில் நாடு புதிய சாதனை படைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். "2020-21-ம் ஆண்டில் எரிவாயு உற்பத்தி 28.7 பிசிஎம் ஆக இருந்தது. 2023-24-ம் ஆண்டில், இது 36.43 பிசிஎம் ஆக அதிகரித்துள்ளது. 2026-ம் ஆண்டில் எரிவாயு உற்பத்தி 45.3 பிசிஎம் ஆக இருக்கும்" என்று மத்திய அமைச்சர் பகிர்ந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரியின் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்த சாதனைக்காக நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள்.

வளர்ந்த இந்தியா என்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதில் எரிசக்தித் துறையில் நமது தன்னிறைவு மிகவும் முக்கியமானது. எரிவாயு உற்பத்தியில் எட்டப்பட்டுள்ள இந்த சாதனை இதில் அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு நேரடிச் சான்றாகும்.”

****

PLM/DL
 



(Release ID: 2044091) Visitor Counter : 18