பிரதமர் அலுவலகம்
ராஜஸ்தான் எம்எல்ஏ திரு அமிர்தலால் மீனா மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
08 AUG 2024 9:46PM by PIB Chennai
ராஜஸ்தான் மாநிலம் சாலம்பர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு அமிர்தலால் மீனா மறைவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
தனது பகுதியின் வளர்ச்சிக்காகவும், தனது நிறுவனப் பணிகளுக்காகவும் அவரின் உறுதிப்பாட்டைப் பிரதமர் நினைவுகூர்ந்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டிருப்பதாவது:
"ராஜஸ்தான் மாநிலம் சலூம்பர் பகுதியைச் சேர்ந்த பிஜேபி எம்எல்ஏ அம்ரித் லால் மீனாவின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளேன். கட்சியில் விடாமுயற்சியுடன் பணியாற்றிய அவர், தனது பகுதியின் வளர்ச்சிக்கும், அமைப்பை வலுப்படுத்துவதற்கும் மதிப்புமிக்க பங்களிப்பைச் செய்தவர். இந்த சோகமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது அனுதாபங்கள்.ஓம் சாந்தி!"
BR/KR
(Release ID: 2043390)
***
(रिलीज़ आईडी: 2043481)
आगंतुक पटल : 94
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada