நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் வளர்ச்சிக்கு சேவைத் துறை தொடர்ந்து குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது, இது நிதியாண்டு 24 இல் பொருளாதாரத்தின் மொத்த அளவில் சுமார் 55 சதவீதமாகும்

प्रविष्टि तिथि: 22 JUL 2024 2:30PM by PIB Chennai

கடந்த மூன்று தசாப்தங்களின் ஏற்ற இறக்கங்களில், சேவைத் துறை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் அரணாக நின்றது. கொள்கை மற்றும் நடைமுறை சீர்திருத்தங்கள், இயல் உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், அனைத்து குறிப்பிடத்தக்க வணிக, தனிப்பட்ட, நிதி மற்றும் உள்கட்டமைப்பு அடிப்படையிலான சேவைகள் பெருந்தொற்றிலிருந்து வலுவாக  மீண்டுள்ளன... எவ்வாறாயினும்இணையவழி கொடுப்பனவுகள்மின்னணு வர்த்தகம் மற்றும் பொழுதுபோக்கு தளங்கள் போன்ற டிஜிட்டல் சேவைகளை நோக்கிய விரைவான மாற்றம், அத்துடன் பிற உற்பத்தி நடவடிக்கைகளில் உள்ளீடுகளாக உயர் தொழில்நுட்ப சேவைகளுக்கான தேவை அதிகரிப்பு ஆகியவற்றில் மாற்றம் உள்ளது.மத்திய நிதி மற்றும்  பெரு நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2023-2024 பொருளாதார ஆய்வறிக்கையில் இது  எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவின் வளர்ச்சிக்கு சேவைத் துறை தொடர்ந்து குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது, இது நிதியாண்டு 24 இல் பொருளாதாரத்தின் மொத்த அளவில் சுமார் 55 சதவீதமாக உள்ளது என்று அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பிடத்தக்க உள்நாட்டு தேவை, விரைவான நகரமயமாக்கல்மின்னணு வர்த்தக தளங்களின் விரிவாக்கம் ஆகியவை தளவாடங்களுக்கான உயர்ந்த தேவைகளை உருவாக்கியது. டிஜிட்டல் தொடர்பான சேவைகள் உள்நாட்டு தேவையைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாகும். உகந்த சூழலை உருவாக்குதல், முதலீட்டை ஊக்குவித்தல், திறன்களை மேம்படுத்துதல் மற்றும் சந்தை அணுகலை எளிதாக்குதல் ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் சேவைகளின் வளர்ச்சி மற்றும் போட்டித்தன்மையை ஊக்குவிப்பதில் அரசு முக்கிய பங்கு வகித்துள்ளது என்று பொருளாதார ஆய்வறிக்கை மேலும் கூறுகிறது.

 

உலகளவில், இந்தியாவின் சேவைத் துறை 6 சதவீதத்திற்கும் அதிகமான உண்மையான வளர்ச்சியைக் கண்டது மற்றும் 2022-ஆம் ஆண்டில் உலகின் வணிக சேவை ஏற்றுமதியில், சேவைகள் ஏற்றுமதி 4.4 சதவீதமாக இருந்தது.

 

கொரோனாவுக்கு முந்தைய ஒரு தசாப்தத்தில், சேவைத் துறையின் உண்மையான வளர்ச்சி விகிதம் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை விட தொடர்ந்து அதிகமாக இருந்தது. பெருந்தொற்றுக்குப் பிறகு, சேவைத் துறையின் வளர்ச்சி, தொடர்பு அல்லாத தீவிர சேவைகளால் தூண்டப்பட்டது, முதன்மையாக நிதி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை சேவைகள்நிதியாண்டு 23 மற்றும்  நிதியாண்டு 24 இல் ஒட்டுமொத்த மதிப்பு கூட்டலில் வளர்ச்சியை விஞ்சியது, பொருளாதாரத்தின்  முன்னேற்றத்தை  இயக்குவதில் அதன் பங்கை மீட்டெடுத்தது.

 

தற்காலிக மதிப்பீடுகளின்படி, 2024-ஆம் நிதியாண்டில் சேவைத் துறை 7.6 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த ஜி.எஸ்.டி வசூல் 2024 ஆம் நிதியாண்டில் ரூ.20.18 லட்சம் கோடியை எட்டியது, இது முந்தைய ஆண்டை விட 11.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

பெருந்தொற்றுக்குப் பிறகு, சேவைகள் ஏற்றுமதி ஒரு நிலையான வேகத்தைப் பராமரித்து வருகிறது மற்றும் நிதியாண்டு 24 இல் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 44 சதவீதமாக உள்ளது. சேவைகள் ஏற்றுமதியில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.

 

அந்நிய நேரடி முதலீடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகக் கடன்கள் மூலம் சர்வதேச அளவில் நிதியாண்டு 2024-இல் மொத்த வெளிநாட்டு வர்த்தகக் கடன் வரவுகளில் சேவைத் துறை 53 சதவீத  பங்களிப்பை வழங்கியுள்ளது. இந்த துறை  நிதியாண்டு 24 இல் 14.9 பில்லியன்  அமெரிக்க டாலர்  முதலீடுகளைப் பெற்று, இதன் மூலம் 58.3 சதவீத ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்தது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034920

 

 

***


(रिलीज़ आईडी: 2035615) आगंतुक पटल : 254
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam