பிரதமர் அலுவலகம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி ஸ்ரீனிவாஸ் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 29 JUN 2024 8:44PM by PIB Chennai

 முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்ரீனிவாஸ்  மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி  இரங்கல் தெரிவித்துள்ளார். 

ஸ்ரீனிவாஸின் பொது சேவை மற்றும் ஏழைகளை மேம்படுத்தும் முயற்சிகளுக்காக அவர் எப்போதும் நினைவு கூரப்படுவார் என்று பிரதமர் கூறியுள்ளார். 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 

"முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டி. ஸ்ரீனிவாஸ் அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது. பொது சேவைக்காகவும், ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கும் முயற்சிகளுக்காகவும் அவர் நினைவுகூரப்படுவார். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் உள்ளன: பிரதமர் நரேந்திர மோடி"

**************

AD/PLM/KV



(Release ID: 2029662) Visitor Counter : 27