பிரதமர் அலுவலகம்

முதன்முறையாக இணையமைச்சராக பதவி ஏற்றிருப்பவர்கள் பிரதமருடன் சந்திப்பு

Posted On: 28 JUN 2024 10:46PM by PIB Chennai

மத்திய அமைச்சரவையில் முதன்முறையாக இணை அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்கள் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தனர். அவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

 சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

"மத்திய அமைச்சரவையில் முதல் முறையாக இணையமைச்சர்களாகப் பதவி ஏற்றவர்களை சந்தித்தேன். அவர்கள், அமைச்சரவையில் தங்களது பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில் அவர்களின் அனுபவங்களைக்  கேட்டறிந்தேன். அடித்தளத்தில் இருந்து ஆட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இந்தச் சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. 

***** 

SMB/PLM/KV
 



(Release ID: 2029543) Visitor Counter : 27