பிரதமர் அலுவலகம்

நாடாளுமன்ற இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை முன்னேற்றம் மற்றும் நல்லாட்சிக்கான செயல் திட்டத்தை வழங்கியுள்ளது: பிரதமர்

Posted On: 27 JUN 2024 3:05PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை, விரிவானதாக இருந்ததாகவும், முன்னேற்றம் மற்றும் நல்லாட்சிக்கான செயல் திட்டத்தை பிரதிபலித்துள்ளது என்றும் பிரதமர் திரு ரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரையின் முழு வடிவத்தின் இணைப்பையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை விரிவானதாகவும், முன்னேற்றம் மற்றும் நல்லாட்சிக்கான செயல் திட்டத்தை முன்வைப்பதாகவும் இருந்தது. இது, இந்தியா அடைந்து வரும் முன்னேற்றங்களையும், திறன்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. நமது குடிமக்களின் வாழ்க்கையில் தரமான மாற்றத்தை உறுதி செய்ய நாம் கூட்டாக சமாளிக்க வேண்டிய சில முக்கிய சவால்களும் அவரது உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.”

***

MM/PKV/RR/KV

 

 

 

 

 



(Release ID: 2029042) Visitor Counter : 29