சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம்

Posted On: 20 JUN 2024 12:53PM by PIB Chennai

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாட்னாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்ததாக சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. பாட்னாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு விருந்தினர் மாளிகை வசதி இல்லை என்பதை என்.எச்.ஏ.ஐ தெளிவுபடுத்த விரும்புகிறது. அதன்படி, ஊடகங்கள் இதைக் கவனத்தில் கொண்டு, ஏற்கனவே வெளியிடப்பட்ட தவறான செய்தி அறிக்கையில் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

***

(Release ID: 2026907)

AD/PKV/AG/RR



(Release ID: 2026972) Visitor Counter : 69