குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பத்திரிகைக்கான அறிவிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 19 MAR 2024 10:53AM by PIB Chennai

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளில் இருந்து டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்ததை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

வழக்கமான ஏற்பாடுகள் செய்யும் வரை, தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பணிப் பொறுப்புகளை, தமது பணிகளுடன் கூடுதலாக நிறைவேற்ற ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணனை நியமிப்பதில் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியடைகிறார்.  

அவரது நியமனம், அவர் இந்தப் பொறுப்புகளை ஏற்கும் நாளில் இருந்து அமலுக்கு வரும்.

***

PKV/KV

 


(வெளியீட்டு அடையாள எண்: 2015475) வருகையாளர் எண்ணிக்கை : 202
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu