பிரதமர் அலுவலகம்

புதுதில்லியில் என்.பி.டி. அனைத்து மகளிர் பைக் பேரணிக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்

Posted On: 10 MAR 2024 8:10PM by PIB Chennai

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் நடைபெற்ற நவபாரத் டைம்ஸ் அனைத்து பெண்கள் பைக் பேரணியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;

"இந்தப் பேரணியில் உற்சாகத்துடன் பங்கேற்ற பெண் சக்திக்கு வாழ்த்துக்கள். நமது சகோதரிகளும், புதல்விகளும் ஒவ்வொரு துறையிலும் நாட்டைப் பெருமைப்படுத்தியுள்ளனர், அவர்கள் தங்களுக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளனர். இந்த அற்புதமான முயற்சிக்கு @NavbharatTimes வாழ்த்துக்கள்."​

***

PKV/AG



(Release ID: 2013647) Visitor Counter : 40