பிரதமர் அலுவலகம்

மார்ச் 12 அன்று பிரதமர் குஜராத் மற்றும் ராஜஸ்தான் செல்கிறார்

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் 'பாரத சக்தி' முப்படைகளின் பயிற்சியை பிரதமர் காண உள்ளார்

'பாரத சக்தி' - முப்படைகளின் துப்பாக்கிச் சூடு மற்றும் சூழ்ச்சி பயிற்சி - தற்காப்பில் தற்சார்பை நோக்கிய நாட்டின் வலுவான முன்னேற்றத்திற்கு எடுத்துக்காட்டு

அகமதாபாத்தில் சுமார் ரூ.1,06,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார் மற்றும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

சரக்கு ரயில் வழித்தடத் திட்டத்தின் பல்வேறு முக்கிய பிரிவுகளை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

10 புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்

தாஹேஜில் பெட்ரோநெட் எல்.என்.ஜியின் பெட்ரோகெமிக்கல் வளாகத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்

கோச்ராப் ஆசிரமத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்; சபர்மதியில் உள்ள காந்தி ஆசிரம நினைவகத்தின் பெருந்திட்டத்தையும் தொடங்கிவைக்கிறார்

Posted On: 10 MAR 2024 5:19PM by PIB Chennai

குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு  2024  மார்ச் 12, அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார். காலை 9.15 மணியளவில், ரூ.1,06,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை  பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து,  அடிக்கல் நாட்டுகிறார்.
அதன்பிறகு, காலை 10 மணியளவில் சபர்மதி ஆசிரமத்திற்கு செல்லும் பிரதமர், அங்கு கோச்ராப் ஆசிரமத்தை திறந்து வைத்து, காந்தி ஆசிரம நினைவகத்தின் பெருந்திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
அதன்பிறகு, 1.45 மணியளவில், ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் முப்படைகளின் துப்பாக்கிச் சூடு மற்றும் உத்திப்பூர்வ பயிற்சியின் வடிவத்தில் உள்நாட்டு பாதுகாப்புத் திறன்களின் ஒருங்கிணைந்த 'பாரத சக்தி' எனும் செயல்விளக்க பயிற்சியை பிரதமர் பார்வையிடுவார்.
 
பொக்ரானில் பிரதமர்
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் முப்படைகளின் நேரடி துப்பாக்கி சூடு மற்றும் உத்திப்பூர்வ பயிற்சியின் வடிவத்தில் உள்நாட்டு பாதுகாப்புத் திறன்களின் ஒருங்கிணைந்த செயல்விளக்கத்தையும் பிரதமர் பார்வையிட உள்ளார்.
நாட்டின் தற்சார்பு முன்முயற்சியை அடிப்படையாகக் கொண்ட நாட்டின் வலிமையை நிரூபிக்கும் வகையில் 'பாரத சக்தி' பயிற்சியில் உள்நாட்டு ஆயுத அமைப்புகள் மற்றும் தளங்களின் வரிசை காட்சிக்கு வைக்கப்படும். நிலம், வான், கடல், சைபர் மற்றும் விண்வெளி களங்களில் உள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்திய ஆயுதப்படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு திறன்களை வெளிப்படுத்தும் எதார்த்தமான, ஒருங்கிணைந்த மற்றும் பல கள நடவடிக்கைகளை உருவகப்படுத்தும்.
டி-90 (ஐஎம்) டாங்கிகள், தனுஷ் மற்றும் சாரங் கன் சிஸ்டம்ஸ், ஆகாஷ் ஆயுத அமைப்பு, லாஜிஸ்டிக்ஸ் ட்ரோன்கள், ரோபோடிக் மியூல்ஸ், மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ஏ.எல்.எச்) மற்றும் இந்திய ராணுவத்தின் ஆளில்லா வான்வழி வாகனங்கள் உள்ளிட்ட முக்கிய உபகரணங்கள் மற்றும் ஆயுத அமைப்புகள் இந்த பயிற்சியில் பங்கேற்கின்றன.
கடற்படை கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், சரக்குகளை சுமந்து செல்லும் தானியங்கி வான்வழி வாகனங்கள்  ஆகியவற்றை இந்திய கடற்படை காட்சிப்படுத்தும், இது கடல்சார் வலிமை மற்றும் தொழில்நுட்ப நுட்பத்தை எடுத்துக்காட்டுகிறது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக போர் விமானங்களான தேஜஸ், இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் மேம்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை இந்திய விமானப்படை நிலைநிறுத்தும்.
உள்நாட்டு தீர்வுகளுடன் சமகால மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளவும் சமாளிக்கவும் இந்தியாவின் தயார்நிலையை தெளிவாகக் குறிக்கும் வகையில், பாரத சக்தி உலக அரங்கில் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு திறன்களின் மீள்திறன், புதுமை மற்றும் வலிமையை எடுத்துக்காட்டுகிறது.
 
 
இந்திய ஆயுதப் படைகளின் வலிமை மற்றும் செயல்பாட்டு வலிமை மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் புத்தி கூர்மை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் காண்பிப்பதன் மூலம், தற்காப்பில் தற்சார்ப்பை நோக்கிய நாட்டின் வலுவான முன்னேற்றத்திற்கு இந்த திட்டம் எடுத்துக்காட்டாகத் திகழும்.
அகமதாபாத்தில் பிரதமர்
ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் துறைக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், அகமதாபாத்தில் உள்ள டி.எஃப்.சியின் செயல்பாட்டு கட்டுப்பாட்டு மையத்திற்கு பிரதமர் வருகை தந்து, அடிக்கல் நாட்டுவதுடன், ரூ.1,06,000 கோடிக்கும் அதிகமான ரயில்வே மற்றும் பெட்ரோகெமிக்கல் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.
ரயில்வே பணிமனைகள், லோகோ ஷெட்கள், பிட் லைன்கள் / ரயில் பெட்டி டிப்போக்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார்; பால்தான் - பாராமதி புதிய பாதை; மின்சார இழுவை அமைப்பு மேம்பாட்டுப் பணிகள்  மற்றும் கிழக்கு டி.எஃப்.சி-யில் புதிய குர்ஜா முதல் சஹ்னேவால் பிரிவு மற்றும் மேற்கு டி.எஃப்.சி-யில் புதிய மகர்புரா முதல் புதிய கோல்வாட் பிரிவு இடையேயான அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடத்தின் இரண்டு புதிய பிரிவுகள்; மேற்கு டி.எஃப்.சியின் ஆபரேஷன் கண்ட்ரோல் சென்டர் (ஓ.சி.சி), அகமதாபாத்.ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 
அகமதாபாத்-மும்பை சென்ட்ரல், செகந்திராபாத்-விசாகப்பட்டினம், மைசூரு-டாக்டர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் (சென்னை),  பாட்னா-லக்னோ, நியூ ஜல்பைகுரி-பாட்னா, பூரி-விசாகப்பட்டினம், லக்னோ - டேராடூன், கலபுராகி – சர் எம்.விஸ்வேஸ்வரய்யா முனையம், ராஞ்சி-வாரணாசி, கஜுராஹோ-தில்லி (நிஜாமுதீன்) இடையே 10 புதிய வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
நான்கு வந்தே பாரத் ரயில்களின் நீட்டிப்பையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைப்பார். அகமதாபாத்-ஜாம்நகர் வந்தே பாரத் துவாரகா வரை நீட்டிக்கப்படுகிறது, அஜ்மீர்-டெல்லி சராய் ரோஹில்லா வந்தே பாரத் சண்டிகர் வரையிலும், கோரக்பூர்-லக்னோ வந்தே பாரத் பிரயாக்ராஜ் வரையிலும், திருவனந்தபுரம்-காசர்கோடு வந்தே பாரத் மங்களூரு வரையிலும் நீட்டிக்கப்படுகிறது. மற்றும் அசன்சோல் மற்றும் ஹட்டியா & திருப்பதி மற்றும் கொல்லம் நிலையங்களுக்கு இடையில் இரண்டு புதிய பயணிகள் ரயில்களையும் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
புதிய குர்ஜா சந்திப்பு, சஹ்னேவால், புதிய ரேவாரி, புதிய கிஷன்கர், புதிய கோல்வாட் மற்றும் புதிய மகர்புரா ஆகிய பல்வேறு இடங்களில் இருந்து அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடத்தில் சரக்கு ரயில்களையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
ரயில் நிலையங்களில் 50 பிரதமரின் மக்கள் மருந்தக மையங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இந்த மக்கள் மருந்தகங்கள் மக்களுக்கு மலிவான மற்றும் தரமான பொது மருந்துகளை வழங்கும்.
51  விரைவு சக்தி பன்னோக்கு சரக்கு முனையங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இந்த முனையங்கள் பல்வேறு வகையான போக்குவரத்து முறைகளுக்கு இடையே சரக்குகளின் தடையற்ற இயக்கத்தை ஊக்குவிக்கும்.
80 பிரிவுகளில் 1045 கிலோ மீட்டர் தானியங்கி சமிக்ஞை சேவையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த மேம்படுத்தல் ரயில் இயக்கத்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்தும்.
2646 ரயில் நிலையங்களில் உள்ள ரயில் நிலையங்களில் டிஜிட்டல் கட்டுப்பாட்டு முறையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இது ரயில்களின் செயல்பாட்டு செயல்திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும்.
35 ரயில் பெட்டி உணவகங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.  ரயில் பெட்டி உணவகம் ரயில்வேக்கு கட்டணம் அல்லாத வருவாயை ஈட்டித் தருவதோடு பயணிகள் மற்றும் பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாடு முழுவதும் பரவியுள்ள 1500-க்கும் மேற்பட்ட ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு அரங்குகளை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.  இந்த அரங்குகள் உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் மற்றும் உள்ளூர் கைவினைஞர்கள் மற்றும் வணிகங்களுக்கு வருமானத்தை உருவாக்கும்.
975 இடங்களில் உள்ள சூரிய மின்சக்தி நிலையங்கள்/கட்டிடங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த முயற்சி இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளுக்கு பங்களிக்கும் மற்றும் ரயில்வேயின் கார்பன் தடம் குறைக்கப்படும்.
குஜராத் மாநிலம் தாஹேஜில் ரூ.20,600 கோடி மதிப்பிலான ஈத்தேன் மற்றும் புரோபேன் கையாளும் வசதிகளை உள்ளடக்கிய பெட்ரோநெட் திரவ இயற்கை எரிவாயுவின் பெட்ரோகெமிக்கல் வளாகத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். தற்போதுள்ள திரவ இயற்கை எரிவாயு மறு வாயுவாக்க முனையத்திற்கு அருகாமையில் பெட்ரோகெமிக்கல் வளாகத்தை அமைப்பது மூலதன செலவிலும், இயக்க செலவிலும் குறிப்பிடத்தக்க சேமிப்பை விளைவிக்கும். 
இத்திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் திட்ட செயலாக்க நிலையில் 50,000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பும், அதன் செயல்பாட்டு நிலையில் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாகும். இதன் மூலம் இப்பகுதியில் பெரும் சமூகப் பொருளாதார பயன்கள் கிடைக்கும். 
குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரண்டு மாநிலங்களில் ரூ.400 கோடி மதிப்பில் ஏக்தா மால்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.
ஏக்தா மால்கள் இந்திய கைத்தறி, கைவினைப் பொருட்கள், பாரம்பரிய தயாரிப்புகள் மற்றும் ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்புகளின் வளமான மற்றும் மாறுபட்ட பாரம்பரியத்தை ஆதரிக்கின்றன. ஏக்தா மால்கள்,  இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையின் அடையாளமாகவும், நமது பாரம்பரிய திறன்கள் மற்றும் துறைகளின் வளர்ச்சி மற்றும் அதிகாரமளித்தலுக்கான கிரியா ஊக்கியாகவும் திகழ்கின்றன.
புதிதாக மின்மயமாக்கப்பட்ட பிரிவுகளை நாட்டுக்கு அர்ப்பணித்தல், ரயில் தடங்களை இரட்டிப்பாக்குதல்/பலவழி தடம் அமைத்தல், ரயில்வே சரக்கு கொட்டகைகள், பணிமனைகள், லோகோ ஷெட்கள், குழி பாதைகள்/ரயில் பெட்டி டிப்போக்கள் ஆகியவற்றை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
நவீன மற்றும் வலுவான ரயில்வே கட்டமைப்பை உருவாக்குவதில் அரசின் அர்ப்பணிப்புக்கு இந்தத் திட்டங்கள் ஒரு சான்றாகும். இந்த முதலீடு, இணைப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து, புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.
சபர்மதி நகரில் பிரதமர்
மறுமேம்பாடு செய்யப்பட்ட கோச்ராப் ஆசிரமத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். 1915 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்த பின்னர் மகாத்மா காந்தியால் நிறுவப்பட்ட முதல் ஆசிரமம் இதுவாகும். இது குஜராத் வித்யாபீடத்தால் நினைவுச்சின்னமாகவும், சுற்றுலா இடமாகவும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. காந்தி ஆசிரம நினைவிடத்தின் பெருந்திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைப்பார்.
மகாத்மா காந்தியின் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கவும், போற்றவும், அவரது கொள்கைகளை வெளிப்படுத்தவும், அவரை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வரவும் பிரதமர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
காந்தி ஆசிரம நினைவுத் திட்டம், மகாத்மா காந்தியின் போதனைகள் மற்றும் தத்துவங்களை தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு புத்துயிர் அளிக்க உதவும்.
இந்த ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ், ஆசிரமத்தின் தற்போதுள்ள ஐந்து ஏக்கர் பரப்பளவு 55 ஏக்கராக விரிவுபடுத்தப்படும். தற்போதுள்ள 36 கட்டிடங்கள் மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படும், அவற்றில், காந்தியின் வசிப்பிடமாக செயல்பட்ட 'ஹ்ரிடே குஞ்ச்' உட்பட 20 கட்டிடங்கள் பாதுகாக்கப்படும், 13 கட்டடங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்.
 
ஒருங்கிணைந்த திட்டத்தில் புதிய கட்டிடங்கள், நிர்வாக வசதிகள், நோக்குநிலை மையம் போன்ற பார்வையாளர் வசதிகள், ராட்டை நூற்பு, கையால் செய்யப்பட்ட காகிதம், பருத்தி நெசவு மற்றும் தோல் வேலைகள் மற்றும் பொது பயன்பாடுகள் பற்றிய கலந்துரையாடல் பட்டறைகள் ஆகியவை அடங்கும். இந்த கட்டிடங்கள் காந்தியின் வாழ்க்கையின் அம்சங்களையும் ஆசிரமத்தின் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் கண்காட்சிகள் மற்றும் செயல்பாடுகளைக் கொண்டிருக்கும்.
காந்தியின் கருத்துக்களைப் பாதுகாக்கவும், பரப்பவும் ஒரு நூலகம் மற்றும் ஆவணக் கட்டிடத்தை உருவாக்கவும் இந்த ஒருங்கிணைந்த முன்வடிவில் திட்டமிடப்பட்டுள்ளது. வருகை தரும் அறிஞர்கள் ஆசிரமத்தின் நூலகம் மற்றும் ஆவணக் காப்பகங்களைப் பயன்படுத்துவதற்கான வசதிகளையும் இது உருவாக்கும். பல்வேறு எதிர்பார்ப்புகளுடன், பல மொழிகளில் பார்வையாளர்களுக்கு வழிகாட்டக்கூடிய ஒரு விளக்க மையத்தை உருவாக்கவும், கலாச்சார ரீதியாகவும் அறிவுசார் ரீதியாகவும் அவர்களின் அனுபவத்தை மேலும் தூண்டுவதாகவும் வளப்படுத்துவதாக மாற்றவும் இந்த திட்டம் உதவும்.
இந்த நினைவகம் எதிர்கால சந்ததியினருக்கு உத்வேகம் அளிப்பதாகவும், காந்திய சிந்தனைகளை வளர்ப்பதாகவும், காந்திய விழுமியங்களின் சாரத்தை உயிர்ப்பிப்பதாகவும் அமையும்.



(Release ID: 2013280) Visitor Counter : 92