பிரதமர் அலுவலகம்

நவ்சாரியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கிவைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்துப் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 22 FEB 2024 8:32PM by PIB Chennai

பாரத் மாதா கி ஜே!
பாரத் மாதா கி ஜே!
குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல், மாநில அரசின் அமைச்சர்கள், எனது நாடாளுமன்ற சகா, அதே பிராந்தியத்தின் பிரதிநிதி, குஜராத்தின் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சி.ஆர்.பாட்டீல், மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், எனதருமை சகோதர சகோதரிகளே, நீங்கள் அனைவரும் எப்படி இருக்கிறீர்கள்?
குஜராத்தில் இன்று நான் நடத்தும் மூன்றாவது நிகழ்ச்சி இது. இன்று காலை, அகமதாபாத்தில் குஜராத் முழுவதிலும் இருந்து கால்நடை பராமரிப்பு மற்றும் பால்பண்ணைத் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தனிநபர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதைத் தொடர்ந்து, மெஹ்சானாவில் உள்ள வாலிநாத் ஆலயத்தின் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் கவுரவம் எனக்கு கிடைத்தது. இப்போது, நவ்சாரியில் வளர்ச்சியின் முன்னேற்றங்களைக் கொண்டாடுவதில் உங்கள் அனைவருடனும் இணைவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். பூபேந்திர பாய் குறிப்பிட்டதைப் போல, நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதன்முறையாக ஒரே நேரத்தில் கணிசமான தொகை மதிப்பிலான இத்தகைய விரிவான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
நண்பர்களே,
நாடு முழுவதும், நாடாளுமன்றத்திலும், வீதிகளிலும் தற்போது ஒரு உற்சாகமான விவாதம் நடந்து வருகிறது. அந்த விவாதம் "மோடியின் உத்தரவாதம்" என்பதைச் சுற்றியே சுழல்கிறது. மோடி என்ன வாக்குறுதி அளித்தாலும் அதை நிறைவேற்றுவார் என்பதை ஒவ்வொரு குடிமகனும் ஒப்புக் கொள்கிறான். ஒருவேளை நாட்டின் பிற பகுதிகளுக்கு இது ஒரு புதுமையான கருத்தாக இருக்கலாம், ஆனால் மோடியின் வார்த்தை அவரது பந்தம் - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம் என்பதை குஜராத் மக்கள் பல ஆண்டுகளாக அறிவார்கள்
நண்பர்களே,
சூரத் மக்களுக்கு மற்றொரு குறிப்பிடத்தக்க திட்டம் இன்று தொடங்குகிறது. ரூ.800 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்படவுள்ள தபி ஆற்று தடுப்பணைக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. தபி நதி தடுப்பணையின் கட்டுமானம் சூரத்தில் பல ஆண்டுகளாக நீர் வழங்கலில் உள்ள நீண்டகால சவாலை தீர்க்கும். வெள்ளம் போன்ற அச்சுறுத்தல்களைத் தணிக்கவும் இது உதவும்.
நண்பர்களே,
21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கு மின்சாரம் வழங்குவதில் நமது அணுமின் நிலையங்களின் பங்கு மேலும் விரிவடைய உள்ளது. இன்று தாபியில் உள்ள கக்ரபார் அணுமின் நிலையத்தில் இரண்டு புதிய அணு உலைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு அணு உலைகளும் 'மேட் இன் இந்தியா' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளன. 
நண்பர்களே,
நவ்சாரி இப்போது அதன் தொழில்துறை வளர்ச்சிக்காக அங்கீகாரம் பெற்று வருகிறது, ஆனால் நவ்சாரி உட்பட முழு தெற்கு குஜராத் பிராந்தியமும் விவசாயத்தில் கணிசமாக முன்னேறியுள்ளது. பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டத்தின் மூலம் நவ்சாரி பகுதி விவசாயிகளுக்கு ரூ .350 கோடிக்கும் மேல் பயனடைந்துள்ளனர்.
சகோதர சகோதரிகளே,
மற்றவர்களின் வாக்குறுதிகள் எங்கு தடுமாறுகிறதோ அங்குதான் மோடியின் உத்தரவாதம் தொடங்குகிறது. முதன்முறையாக, நாட்டின் பரம ஏழைகளுக்கு வீடு கிடைக்கும் என்ற உத்தரவாதம் கிடைத்துள்ளது. மோடியின் உத்தரவாதத்தால், தொலைதூர கிராமங்களில் வசிக்கும் சகோதரிகள் கூட தங்கள் வீடுகளுக்கு மின்சாரம் மற்றும் குழாய் நீர் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஏழைகள், விவசாயிகள், கடைக்காரர்கள், தொழிலாளர்கள், காப்பீடு மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் தங்களுக்காக வடிவமைக்கப்படும் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. 
நண்பர்களே,
பழங்குடியினர் பகுதிகளில் அரிவாள் செல் இரத்த சோகையை ஒழிப்பதற்கான தேசிய இயக்கத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். இந்த முன்முயற்சியின் கீழ், நாடு முழுவதும் பழங்குடியினர் பகுதிகளில் அரிவாள் செல் இரத்த சோகைக்கான பரிசோதனை நடத்தப்படுகிறது. நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் போது லட்சக்கணக்கான தனிநபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இப்பகுதியில் மருத்துவக் கல்லூரி ஒன்றும் நடந்து வருகிறது. 
நண்பர்களே,
ஏழைகளாக இருந்தாலும் சரி, நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும் சரி, கிராமங்கள் அல்லது நகரங்களில் வசிப்பவர்களாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த எங்கள் அரசு பாடுபடுகிறது. 
நண்பர்களே,
தாய்மார்கள், சகோதரிகள் உட்பட இன்று நீங்கள் இங்கு கூடியிருப்பது ஆழ்ந்த நன்றியுணர்வால் என்னை நிரப்புகிறது. உங்கள் ஒவ்வொருவரின் ஆசீர்வாதங்களுக்கும் ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். என்னுடன்  சேர்ந்து சொல்லுங்கள் -
"பாரத் மாதா கி ஜே!"
இரு கைகளையும் உயர்த்தி உற்சாகத்துடன் பிரகடனம் செய்வோம் -
"பாரத் மாதா கி ஜே!"
"பாரத் மாதா கி ஜே!"
"பாரத் மாதா கி ஜே!"
மிகவும் நன்றி!


**********


(Release ID: 2008186)
ANU/PKV/IR/AG/KRS



(Release ID: 2010065) Visitor Counter : 47