பிரதமர் அலுவலகம்

காஸ்கஞ்ச் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையைப் பிரதமர் அறிவித்தார்

Posted On: 24 FEB 2024 8:39PM by PIB Chennai

காஸ்கஞ்ச் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நிவாரணத் தொகையை அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
"காஸ்கஞ்சில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்".

*************

ANU/PKV/IR/AG/KV



(Release ID: 2008995) Visitor Counter : 46