பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
2024-25 சர்க்கரைப் பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) கரும்பு கொள்முதலுக்கு சர்க்கரை ஆலைகள் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச ஆதார விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
21 FEB 2024 10:25PM by PIB Chennai
2024-25-ம் ஆண்டு சர்க்கரைப் பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) கரும்பு கொள்முதலுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 340 ரூபாயை குறைந்தபட்ச ஆதார விலையாக சர்க்கரை ஆலைகள் வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இது நடப்பு 2023-24 பருவத்தில் கரும்பு கொள்முதலுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையை விட சுமார் 8% அதிகமாகும். இந்தக் குறைந்தபட்ச ஆதார விலை 2024 அக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும்.
மத்திய அரசின் இந்த முடிவால், கரும்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 5 கோடிக்கும் அதிகமான கரும்பு விவசாயிகள் (குடும்ப உறுப்பினர்கள் உட்பட) மற்றும் லட்சக்கணக்கான பிற நபர்கள் பயனடைவார்கள். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான மோடி உத்தரவாதத்தை நிறைவேற்றுவதை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2007867
***
ANU/PKV/IR/AG/KV
(Release ID: 2008015)
Visitor Counter : 174
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam