பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கர்பூரி தாக்கூர் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி

இடுகை இடப்பட்ட நாள்: 17 FEB 2024 7:03PM by PIB Chennai

திரு. கர்பூரி தாக்கூர் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு இன்று அஞ்சலி செலுத்தினார்.

சமூகத்தில் பின்தங்கிய மற்றும் நலிந்த பிரிவினரின் மரியாதை மற்றும் நலனுக்காக திரு. கர்பூரி தாக்கூர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் என்று திரு மோடி கூறினார்.

பிரதமர் தமது சமீபத்திய உரையிலிருந்து திரு. கர்பூரி தாக்கூர் குறித்த தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்.

சமூக ஊடக தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;

"கர்பூரி தாக்கூர் ஜி நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு எனது வணக்கங்கள். இந்தியாவின் இந்த மக்கள் தலைவர் சமூகத்தின் பின்தங்கிய மற்றும் பலவீனமான பிரிவினரின் மரியாதை மற்றும் நலனுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார். சில நாட்களுக்கு முன்புதான் அவரைப் பற்றிய என் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டேன்’’.

*******

ANU/PKV/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2006821) வருகையாளர் எண்ணிக்கை : 137