நிதி அமைச்சகம்

16-வது நிதிக்குழுவின் முதலாவது கூட்டம் டாக்டர் அரவிந்த் பனகாரியா தலைமையில் புதுதில்லியில் நடைபெற்றது

Posted On: 14 FEB 2024 3:03PM by PIB Chennai

16-வது நிதிக் குழுவின் முதலாவது கூட்டம் டாக்டர் அரவிந்த் பனகாரியா தலைமையில் புதுதில்லி ஜன்பத்தில் உள்ள ஜவஹர் வியாபார் பவனில் நடைபெற்றது. 16-நிதிக்குழுவின் செயலாளர் திரு ரித்விக் ரஞ்சனம் பாண்டே மற்றும்  அதிகாரிகள்,  தலைவர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்றனர்.

குடியரசுத்தலைவரின் உத்தரவின்படி நிதியமைச்சகம் 2023, டிசம்பர் 31 அன்று வெளியிட்ட அறிவிக்கையின்படி 16-வது நிதிக் குழு அதன் விதிமுறைகளைப் பற்றி விவாதித்தது.

மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தொடர்புடையவர்களுடன் விரிவான ஆலோசனைகளின் அவசியத்தை 16-வது நிதிக்குழு எடுத்துரைத்தது.

புதுதில்லியில் ஜன்பத்தில் உள்ள ஜவஹர் வியாபார் பவனில் தனது அலுவலகத்தை அமைக்க 16-வது நிதிக்குழு ஒப்புதல் அளித்தது.

16-வது நிதிக்குழு தனது பரிந்துரைகளை 2025 அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் அளிக்கும். இது 2026 ஏப்ரல் 1 முதல் 5 ஆண்டுகளுக்கான  பரிந்துரைகளாக இருக்கும்.

----

ANU/PKV/IR/KPG/KV



(Release ID: 2005889) Visitor Counter : 1062