பிரதமர் அலுவலகம்
மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் பட்டாசு ஆலையில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
06 FEB 2024 5:43PM by PIB Chennai
மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் பட்டாசு தொழிற்சாலையில் நேரிட்ட விபத்தில் உயிர் இழந்தோரின் குடும்பத்தினருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உதவித் தொகையாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;
"மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நேரிட்ட விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உள்ளூர் நிர்வாகம் உதவி வருகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்.”
***
(Release ID: 2003154)
ANU/PKV/BS/AG/KRS
(रिलीज़ आईडी: 2003187)
आगंतुक पटल : 116
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam