பிரதமர் அலுவலகம்
இந்தி மற்றும் ஒடியா சினிமா ஜாம்பவான் திரு. சாது மெஹர் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
03 FEB 2024 2:17PM by PIB Chennai
இந்தி மற்றும் ஒடியா திரைப்படங்களில் நீண்டகாலம் பணியாற்றிய தலைசிறந்த திரு. சாது மெஹர் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"சாது மெஹர் ஜியின் மறைவு திரைப்பட உலகிற்கும், நமது கலாச்சார பாரம்பரியத்திற்கும் பெரும் இழப்பாகும். இந்தி மற்றும் ஒடியா சினிமா இரண்டிலும் நீண்டகாலம் பணியாற்றியவர், அவரது சினிமா நடிப்பும் அர்ப்பணிப்பும் முன்மாதிரியாக இருந்தது. ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ள இந்தத் தருணத்தில் அவரது குடும்பத்தினர், சக ஊழியர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. அவரது நினைவாக, அவர் விட்டுச் சென்ற வளமான கலை பாரம்பரியத்தை நாம் போற்றுகிறோம். ஓம் சாந்தி
----
ANU/PKV/BS/DL
(रिलीज़ आईडी: 2002283)
आगंतुक पटल : 114
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam