நிதி அமைச்சகம்

இடைக்கால மத்திய பட்ஜெட் 2024-25-ன் சிறப்பம்சங்கள்

Posted On: 01 FEB 2024 12:54PM by PIB Chennai

அனைவரையும் உள்ளடக்கிய அனைவரின் வளர்ச்சி மற்றும் அனைவரின் நம்பிக்கை என்ற தாரக மந்திரத்துடன், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான அனைவரது முயற்சியுடன் கூடிய அணுகுமுறையுடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறி 2024-25-ம் நிதியாண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இந்த இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

பகுதி- ஏ

 

சமூக நீதி

  • ஏழைகள், மகளிர், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய நான்கு முக்கியமான வகுப்பினரை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பிரதமர் கவனம் செலுத்தி வருகிறார்.

ஏழைகள் நலனே நாட்டின் நலன்

  • கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு  விதமான வறுமை நிலைகளில் உள்ள 25 கோடி மக்களுக்கு மத்திய அரசு உதவியுள்ளது.
  • பிரதமரின் ஜன்-தன் வங்கிக் கணக்கில் நேரடி பணப்பரிமாற்றத் திட்டத்தின் மூலம் வரவு வைக்கப்பட்ட 34 லட்சம் கோடி ரூபாயில் அரசுக்கு 2.7 லட்சம் கோடி ரூபாய் வரை சேமிப்பு கிடைத்துள்ளது.
  • பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் மூலம் 78 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. அதில் 2.3 லட்சம் சாலையோர வியாபாரிகள் 3-வது முறையாக கடனுதவி பெற்றுள்ளனர்.
  • பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் கீழ், குறிப்பாக அதிகம் பாதிக்கக்கூடிய பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
  • 18 வகையான  கைவினை கலை மற்றும் கைவினைப் பொருட்களுக்கான வர்த்தகத்தில்  ஈடுபட்டுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் பிரதமரின் விஷ்வ கர்மா திட்டம் வகை செய்கிறது.

விவசாயிகள் நலன்

  • பிரதமரின் வேளாண் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ், 11.8 கோடி விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
  • பிரதமரின் பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ், 4 கோடி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
  • மின்னணு தேசிய வேளாண் சந்தை 1361 மண்டிகளை ஒருங்கிணைத்துள்ளதுடன், 1.8 கோடி விவசாயிகளுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக சேவைகளை வழங்கியுள்ளது.

பெண் சக்திக்கான  உத்வேகம்

  • பெண் தொழில் முனைவோருக்கு  30 கோடி கடன்கள் முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன
  • உயர்கல்வியில் சேர்ந்துள்ள மகளிரின் எண்ணிக்கை 28 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • ஸ்டெம் (stem) பாடத்திட்டத்தில் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) உலகிலேயே மிக அதிகளவாக 43 சதவீத மகளிர்  சேர்ந்துள்ளனர்.
  • பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், 70 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகள் கிராமப்புற பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் (கிராமப்புறம்)

  • கோவிட் தொற்று பாதிப்பின் சவால்கள் இருந்தபோதிலும், பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், 3 கோடி வீடுகள் கட்டுவதற்கான இலக்கு விரைவில் எட்டப்படும்.
  • மேலும் 2 கோடி வீடுகள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேற்கூரைகளில் சூரியசக்தி மின்உற்பத்தி மற்றும் இலவச மின்சாரம்

  • வீடுகளின் மேற்கூரைகளில் அமைக்கப்படும் சூரிய சக்தி தகடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 300 அலகுகள் மாதந்தோறும் ஒரு கோடி இல்லங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
  • இதன் மூலம் ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுதோறும் 15,000 ரூபாய் முதல் 18,000 ரூபாய் வரை சேமிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுஷ்மான் பாரத்

  • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், வழங்கப்பட்டு வரும் சுகாதாரா சேவைகள் அனைத்து ஆஷா பணியாளர்கள். அங்கன்வாடி பணியாளர்கள்  மற்றும் உதவியாளர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.

விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல்

  • பிரதமரின் மீன் வளர்ப்புத் திட்டத்தின் கீழ், 38 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளதுடன், 10 லட்சம் வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது.
  • பிரதமரின் குறு உணவுப் பதப்படுத்துதல் நிறுவன கட்டமைப்புத்திட்டத்தின் மூலம் 2.4 லட்சம் சுய உதவிக் குழுக்கள் மற்றும் 60 ஆயிரம் தனி நபர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

 

ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுப்படிப்புகளின் வளர்ச்சியை ஊக்குவித்தல். வேலைவாய்ப்பு மற்றும்  மேம்பாடு

  • ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுடன் 50 ஆண்டு கால வட்டியில்லா கடனுதவி வழங்கப்படுவதன் மூலம் நீண்ட கால முதலீடு மற்றும் மறுமுதலீடு தொடர்பான நடவடிக்கைளில் நீண்ட கால மற்றும் குறைந்த அல்லது வட்டியில்லா கடனுதவிகள்
  • பாதுகாப்பு துறையில் தற்சார்பு நிலையை எட்டும் வகையில், தொழில்நுட்ப பயன்பாடுகளை வலுப்படுத்துவதற்கான புதியத் திட்டம் தொடங்கப்படும்.

உள்கட்டமைப்பு

  • உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான மூலதன செலவுகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கைகள் 11.1 சதவீதம் வரை உயர்ந்து 11 லட்சத்து 11 ஆயிரத்து 111 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதுடன், உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3.4 சதவீதமாக உயரும்.

ரயில்வே

  • பிரதமரின் விரைவுச்சக்தி பெருந்திட்டத்தின் கீழ், குறைந்த செலவில் சரக்குப் போக்குவரத்துக்கான மேம்படுத்தப்பட்ட வசதிகளை ஏற்படுத்தும் வகையில் 3 மிகப்பெரிய பொருளாதார ரயில் வழித்தடங்கள் அமைப்பதற்கான  திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
    • எரிசக்தி, கனிம வளம் மற்றும் சிமெண்ட் ஆகியவற்றுக்கான ரயில் வழித்தடங்கள்
    •  துறைமுகங்களை  இணைக்கும் வகையிலான ரயில் வழித்தடங்கள்
    • அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட பகுதிகளுக்கான ரயில் வழித்தடங்கள்
  • 40 ஆயிரம் சாதாரண வகை ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் தரத்திலான ரயில் பெட்டிகளாக மாற்றப்படும்.

விமானப்போக்குவரத்துத் துறை

  • நாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 149-ஆக அதிகரிக்கப்பட்டு இரு மடங்கு உயர்த்தப்படும். 
  • புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள 517 விமான வழித்தடங்கள் மூலம் 1.3 கோடி விமானப் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
  • ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஆணைகளை இந்திய விமானம் போக்குவரத்து அமைச்சகம் வழங்கியுள்ளது.

பசுமை எரிசக்தி

  • நிலக்கரியில் இருந்து எரிவாயு மற்றும் திரவ எரிபொருள் உற்பத்திக்கான திறன்  வரும் 2030-ம் ஆண்டுக்குள் 100 மெட்ரிக் டன் அளவுக்கு  மேம்படுத்தப்படும்.
  • வீட்டு உபயோகத்திற்கான குழாய் மூலம் வழங்கப்படும் இயற்கை எரிவாயு மற்றும் போக்குவரத்திற்கான அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவுடன் உயிரி எரிவாயுவை கலப்பதற்கான கட்டாய நடைமுறைகள் படிப்படியாக அமல்படுத்தப்படும்

சுற்றுலாத்துறை

  • முக்கிய சுற்றுலா தலங்களில்  விரிவான மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் மாநிலங்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட அதனை சர்வதேச தரத்தில் சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
  • தரமான வசதிகள் மற்றும் சேவைகளின் அடிப்படையில், சுற்றுலா மையங்களை தரவரிசைப்படுத்துவதற்கான நடைமுறைகள் வகுக்கப்படும்.
  •  சுற்றுலாத்துறை மேம்படுத்துவதற்கான மாநில அரசு நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில், நீண்ட கால வட்டியில்லா கடன்கள் வழங்கப்படும்.

முதலீடுகள்

  • 2014-ம் ஆண்டில் இருந்து 2023-ம் ஆண்டு வரையிலான காலத்தில் அந்நிய நேரடி முதலீடாக 596 பில்லியன் அமெரிக்கன் டாலர்கள் பெறப்பட்டுள்ளது.  இது 2005-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலத்தில் பெறப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டை காட்டிலும் இரு மடங்கு அதிகமாகும்.

மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான மறு சீரமைப்புத் திட்டங்கள்

  • மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் வளர்ச்சிக்கான முக்கிய  சீரமைப்புத் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 75 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான நிதி ஆதாரத்திற்கான 50 ஆண்டுகால வட்டியில்லா கடன் தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீடுக்ள 2023-24

  • கடன்கள் தவிர திருத்தியமைக்கப்பட்ட மொத்த வருவாய் மதிப்பீடு, 27.56 லட்சம் கோடியாக உள்ளது. அதில் 23.24 லட்சம் கோடி ரூபாய் வரி வருவாய் ஆகும்.
  • திருத்தியமைக்கப்பட்ட மொத்த செலவினத் தொகை 44.90 லட்சம் கோடி ரூபாயாகும்.
  • வருவாயின வரவுகள் 30.03 லட்சம் கோடி ரூபாய் அளிவிற்கு பட்ஜெட் மதிப்பீட்டைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம்,  நாட்டின் பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் உத்வேகம் பெற்றுள்ளதை பிரதிப்பலிக்கிறது.
  • 2023-24-ம் நிதியாண்டுக்கான திருத்தியமைக்கப்பட்ட நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8 சதவீதமாக உள்ளது.

பட்ஜெட் மதிப்பீடுகள் 2024-25

  • கடன்கள் தவிர மொத்த வருவாய் மற்றும் மொத்த செலவினத்தொகை முறையே 30.80 லட்சம் கோடி மற்றும் 47.67 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • வரிவருவாய் 26.02 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • மாநிலங்களின் முதலீட்டு செலவினங்களுக்கான 50 ஆண்டு கால வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் 1.3 லட்சம் கோடி ரூபாய்  அளவிலான நிதி ஒதுக்கீட்டுடன் நடப்பாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் .
  • 2024-25-ம் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாகுறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடப்பட்டுள்ளது.
  • 2024-25-ம் நிதியாண்டில் காலவரையறையுடன் கூடிய பங்குசந்தைகள் மூலம் பெறப்படும் மொத்த மற்றும் நிகர கடன்தொகை முறையை 14.13 மற்றும் 11.75 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

 

பகுதி- பி

நேரடி வரிகள்

  • நேரடி வரிவிதிப்பு விகிதங்கள் எவ்வித மாற்றமுமின்றி அதே வரி விகிதங்களாக தொடரும் என்று நிதியமைச்சர் முன்மொழிந்துள்ளார்.
  • கடந்த 10 ஆண்டுகளில் நேரடி வரிவசூல் முன்பணம் மும்மடங்காகவும் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 2.4 மடங்காகவும் அதிகரித்துள்ளது.
  • வரிசெலுத்துவோருக்கு அளிக்கப்படும் சேவைகளை மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
    • 2009-10 ம் நிதியாண்டு வரையிலான காலத்தில் 25 ஆயிரம் ரூபாய் அளவிலான நேரடி வரி நிலுவைத் தொகைக்கான கோரிக்கைகள் விலக்கிக்கொள்ளப்படும்.
    • 2010-11-ம் நிதியாண்டு முதல் 2014-15-ம் நிதியாண்டு வரையிலான காலத்தில் 10 ஆயிரம் ரூபாய் அளவிலான நேரடி வரி நிலுவைத் தொகைக்கான கோரிக்கைகள் விலக்கிக்கொள்ளப்படும்.
    • இதன் மூலம் ஒரு கோடி எண்ணிக்கையிலான வரிசெலுத்துவோர் பயனடைவர்.
  • புத்தொழில் நிறுவனங்களுக்கான வரிப் பலன்கள்,  தங்கபத்திரம் மீதான சொத்து உருவாக்க நிதி அல்லது ஓய்வூதிய நிதி மீதான முதலீடுகள் 2025-ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச நிதி சார் சேவைகள் மையத்தின் ஒரு சில அலகுகள் மூலம் மேற்கொள்ளப்படும் நிதிசார் சேவைகளுக்கான வரி விலக்கு 2025-ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை ஓராண்டு காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

மறைமுக வரிகள்

  • முறைமுக வரிகள் மற்றும் இறக்கும் தீர்வைகளுக்கான விகிதங்களில் எவ்வித மாற்றமின்றி தொடரும் என்று நிதியமைச்சர் முன்மொழிந்துள்ளார்.
  • நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறையின் அமலாக்கம் மறைமுக வரிவிதிப்பின் கட்டமைப்பை ஒருங்கிணைத்துள்ளது.       
    • மாதாந்திர சராசரி மொத்த ஜிஎஸ்டி வரி வருவாய் இரண்டு மடங்காக உயர்ந்து நடப்பாண்டில் 1.66 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது
    • ஜிஎஸ்டி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.
    • ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையின் அமலாக்கத்திற்கு பிறகு மாநிலங்களின் ஜிஎஸ்டி வரி வருவாய் (மாநிலங்களுக்கு விடுவிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை உட்பட) 1.22 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலாக்கத்திற்கு முந்தைய காலத்தில் (2012-13 முதல் 2015-16 வரை) 0.72 லட்சம் கோடியாக  இருந்தது.
    • 94 சதவீத தொழில்துறை நிறுவனங்களின் தலைவர்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையின் அமலாக்கம் குறித்து சாதகமான எண்ணங்களை கொண்டுள்ளனர்.
    • விநியோக சங்கிலியை மேம்படுத்தும் வகையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமைந்துள்ளது.
    • வர்த்தகம் மற்றும் தொழில்துறையினரின் சுமைகளை குறைக்கும் வகையில், ஜிஎஸ்டி இணக்க நடைமுறைகள் குறைக்கப்பட்டுள்ளன.
    • குறைவான சரக்குப் போக்குவரத்து கட்டணம் மற்றும் வரிகள்  சரக்கு மற்றும் சேவைகளுக்கான விலைகள் குறைய உதவியதுடன், நுகர்வோருக்கும் பயனளிப்பதாக அமைந்துள்ளது.

சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் வரி சீர்திருத்தத்திற்கான முயற்சிகள்

  • 2013-14-ம் நிதியாண்டில் 2.2 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரியில்லை என்ற நிலையில் இருந்து தற்போது 7 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • சில்லறை வர்த்தகத்திற்கான அனுமானத்தின் அடிப்படையில் செலுத்தப்படும் வருமான உச்சவரம்பு 2 கோடி ரூபாயிலிருந்து 3 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • தொழில்முறை சார்ந்த வருமானத்திற்கு அனுமானத்தின் அடிப்படையிலான உச்சவரம்பு 50 லட்சம் ரூபாயிலிருந்து 75 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • ஏற்கனவே உள்ள உள்நாட்டு நிறுவனங்களுக்கான வருமான வரி விகிதம் 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • புதிதாக  ஏற்படுத்தப்படும் உற்பத்தி நிறுவனங்களுக்கான வருமான வரி விகிதம் 15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • வரிசெலுத்துவோரின் சேவைகளின்  சாதனைகள்
  • வருமான வரி அறிக்கை மீதான மதிப்பீட்டு காலம் 2013-14ம் நிதியாண்டில் சராசரியாக 93 நாட்களாக இருந்த நிலையில் தற்போது 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
  • வரி மதிப்பீடுகளில் சிறந்த நடைமுறைகளை அறிமுகப்படுத்தும் வகையில், நேரடி மதிப்பீடு  மற்றும் மேல்முறையீட்டு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
  • வருமான வரி அறிக்கைக்கான படிவங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், 26AS படிவத்தின் புதிய வடிவம் மற்றும் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வதற்கான முன்கூட்டி நிரப்பப்பட்ட, எளிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள்.
  • இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகள் குறைந்த காலத்தில் விடுவிப்பதற்கு ஏதுவாக  சுங்கத்துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள்.
    • உள்நாட்டு கொள்கலன் நிலையங்களில் சரக்குகளை விடுவிப்பதற்கான கால அவகாசம்  71 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது (47 சதவீதம்)
    • விமான சரக்கக வளாகங்களில் சரக்குகளை விடுவிப்பதற்கான கால அவகாசம் 44 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது (28 சதவீதம்)
    • துறைமுகங்களில் சரக்குகளை விடுவிப்பதற்கான கால அவகாசம் 85 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது( 27 சதவீதம்)

பொருளாதாரதம் -தற்போதையை மற்றும் எதிர்கால நிலை

  • 2015-ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார செயல்பாடுகள் சீரமைக்கப்பட்டு, சரியான நிர்வாக நடைமுறைகளை அமல்படுத்தவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருந்தது. இந்த தருணத்தில்;
    • முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள்,
    •  மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை கட்டமைப்பதற்கான ஆதரவு அளிப்பது
    •  மக்களுக்கு நம்பிக்கை அளிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

“தேசமே முதலில்” என்ற  வலுவான நம்பிக்கையுடன் அரசு வெற்றிப்பெற்றுள்ளது

  •  2014-ம் ஆண்டு வரை இருந்த நிலை மற்றும் தற்போது இருந்த நிலை குறித்து தெளிவாக காணமுடியும்- நிதியமைச்சர்
    • நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும்.

---------

(Release ID: 2001130)

 AD/SV/RS/KRS



(Release ID: 2001675) Visitor Counter : 650