நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றத்தின் அரசியல் கட்சித் தலைவர்களுடன் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜனவரி 30 அன்று ஆலோசனை

நாடாளுமன்ற கூட்டத்தொடர் 2024 ஜனவரி 31 முதல் பிப்ரவரி 9 வரை நடைபெறும்

இடுகை இடப்பட்ட நாள்: 29 JAN 2024 2:53PM by PIB Chennai

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டம் நாளை (ஜனவரி 30, 2024) காலை 11:30 மணிக்கு புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற நூலகக் கட்டிடத்தில் நடைபெறும்.

நாடாளுமன்ற அமர்வு 2024, ஜனவரி 31 அன்று குடியரசுத்தலைவரின் உரையுடன் தொடங்கும். அரசு அலுவல்களின் அவசரங்களுக்கு உட்பட்டு, அமர்வு 2024, பிப்ரவரி 9 அன்று முடிவடையும். மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2024 பிப்ரவரி 1 அன்று மத்திய அரசின்  இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

***

(Release ID: 2000336)

ANU/SMB/RR


(வெளியீட்டு அடையாள எண்: 2000341) வருகையாளர் எண்ணிக்கை : 556
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Kannada