பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

கோல் இந்தியா நிறுவனத்தின் 2 பங்கு முதலீட்டு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 24 JAN 2024 6:10PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் கூட்டு முயற்சி மூலம் இசிஎல் கட்டுப்பாட்டு பகுதியில் நிலக்கரியிலிருந்து செயற்கையான இயற்கை எரிவாயு திட்டத்தை அமைப்பதற்கான கோல் இந்தியா நிறுவனத்தின் பங்கு முதலீட்டிற்கான முன்மொழிவு, கோல் இந்தியா & பெல் நிறுவனத்தின் கூட்டு முயற்சி மூலம் எம்சிஎல் கட்டுப்பாட்டு பகுதியில் நிலக்கரியிலிருந்து அம்மோனியம் நைட்ரேட் திட்டத்தை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.   

கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் பங்கு முதலீடுகளுக்கான முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவைக் குழு கீழ்க்கண்டவாறு ஒப்புதல் அளித்துள்ளது:

கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் பங்கு மூலதனம் ரூ.1,997.08 கோடி கடன்-சமபங்கு விகிதம் 70:30 என்ற விகிதத்தைக் கருத்தில் கொண்டு, மற்றும் ரூ.13,052.81 கோடி திட்ட மூலதன செலவு மதிப்பீட்டுடன் கூட்டு முயற்சி நிறுவனத்தில் 51% பங்கு முதலீடு மேற்கு வங்கத்தின் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனம் சோன்பூர் பஜாரி பகுதியில் முன்மொழியப்பட்டுள்ள நிலக்கரியிலிருந்து செயற்கையான இயற்கை எரிவாயு திட்டம் மூலதன செலவு மூலம் கோல் இந்தியா நிறுவனம் மற்றும் கெயில் நிறுவனத்தின் கூட்டு முயற்சி மூலம் மேற்கொள்ளப்படும்.

கோல் இந்தியா நிறுவனம் ரூ.1,802.56 கோடி பங்கு மூலதனத்தை 70:30 என்ற கடன்-பங்கு விகிதத்தைக் கருத்தில் கொண்டு, மற்றும் ஒடிசா மாநிலம் ஜர்சுகுடா மாவட்டத்தில் மகாநதி நிலக்கரி வயல்கள் நிறுவனம், லகான்பூர் பகுதியில் நிலக்கரியிலிருந்து அம்மோனியம் நைட்ரேட்டை ரூ.11,782.05 கோடி திட்ட மூலதன செலவு மதிப்பீட்டுடன் கோல் இந்தியா நிறுவனம் ரூ.1,802.56 கோடி பங்கு மூலதனத்தை சிஐஎல் மற்றும் பெல் நிறுவனத்தின் கூட்டு முயற்சி மூலம் பெற்றுள்ளது.

கோல் இந்தியா நிறுவனத்தின் நிகர மதிப்பில் 30 சதவீதத்திற்கு மேல் முதலீடு செய்வதற்கு கோல் இந்தியா நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள் 100 மெட்ரிக் டன் நிலக்கரி எரிவாயுமயமாக்கல் என்ற இலக்கை அடையவும், தற்சார்பு மற்றும் எரிசக்தி சுதந்திரம் என்ற இந்தியாவின் இரட்டை நோக்கங்களை நிறைவேற்றவும் கோல் இந்தியா நிறுவனம் பின்வரும் இரண்டு நிலக்கரி எரிவாயுமயமாக்கும் ஆலைகளை அமைக்கும்

மேற்கு வங்கம் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள கிழக்கு நிலக்கரி வயல்களின் சோன்பூர் பஜாரி பகுதியில் நிலக்கரியிலிருந்து சிறப்பு இயற்கை எரிவாயு திட்டத்தை அமைக்க கோல் இந்தியா நிறுவனம், இந்திய இயற்கை எரிவாயு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. கோல் இந்தியா நிறுவனம் ரூ.13,052.81 கோடி திட்ட மதிப்பீட்டில் 70:30 என்ற கடன் பங்கு விகிதத்தை கருத்தில் கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

கோல் இந்தியா நிறுவனம் ஒடிசா மாநிலம் ஜர்சுகுடா மாவட்டத்தில் உள்ள மகாநதி நிலக்கரி வயல் நிறுவனத்தின் லகன்பூர் பகுதியில் நிலக்கரியிலிருந்து அம்மோனியம் நைட்ரேட் திட்டத்தை ரூ.11,782.05 கோடி திட்ட மதிப்பீட்டில் 70:30 வரை கடன்:பங்கு விகிதத்தைக் கருத்தில் கொண்டு அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

----------------

(Release ID: 1999221)

ANU/AD/BS/RS/KRS

 



(Release ID: 1999340) Visitor Counter : 76